அதிதி அத்தியாயம் - 6

  • 4.9k
  • 1.4k

ஜூலியின் கண்ணில் இருந்து கண்ணீர் ததும்புகிறது...தன் கண்ணை துடைத்தவாறு அழுதுகொண்டே தன் ரூமிற்கு ஓடுகிறாள்.மோகன் கோவத்தில் ரகுவை கை ஓங்குகிறான் ஓங்கிவிட்டு அடிக்காமல்"சீ..உங்களுக்கு நடுவுல மாட்டிக்கிட்டு இப்படி சாவுறதுக்கு பேசாம அவளுக்கு பதிலா நான் தூக்கு போட்டிருக்கலாம்...செய்..."தன் தலையில் அடித்துக்கொண்டு ஜூலியை சமாதானம் செய்ய அவள் பின்னால் ஓடுகிறான்.ரகு அன்றிரவு முடிவு செய்தான் ஜுலி இந்த வீட்டை விட்டு போகும் வரை தான் சாப்பிடப்போவதில்லை என்று..சொல்லி ஒரு நாள் சாப்பிடாமலும் இருந்துவிட்டான்.ஜூலியும் தான் ஒரு இரண்டு நாள் தன் தந்தை வீட்டிற்கு சென்று வருகிறேன் என் மனதிற்கும் கொஞ்சம் ஆறுதளாக இருக்கும் என மோகனிடம் சொல்லிவிட்டு சென்றாள்..மோகனும் ஜுலி சென்றதை காரணமாக சொல்லி ரகுவை சாப்பிட வைத்துவிட்டான்.அடுத்த வாரத்தில் மல்லிகா இறந்து ஓர் வருடம் ஆயிருந்தது...அவளுக்கு சடங்கு செய்யும் பொருட்டு ஷர்மி உட்பட சொந்தங்கள் அனைவரும் வந்திருந்தனர்.அப்பொழுது ரகு ஷர்மியை தனியாக அழைத்து அழுதுவிட்டான்"சித்தி...என்ன கூட்டிட்டு போ....இங்க இருக்க எனக்கு புடிக்கல....நா