நீ தானே என் பொன் வசந்தம்

  • 65.1k
  • 3
  • 18.3k

கல்லூரியில் பட்டம் பெற சேர்ந்த அன்று ரஞ்சிஜாதாவுக்கும் சேகருக்கும் மகிழ்ச்சி வானத்தில் சிறகடித்து பறந்தன. இருவரும் நல்ல ம திப்பெண்கள் பெற்றிருந்ததால் காலூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அன்று தான் இருவரும் முதல் முதலாக அறிமுகமானார்கள். மொதல் சந்திப்பிலேயே ஒருவருக்கு ஒருவரை புடித்திருந்தது. அவங்க மனப்பான்மையும் பரஸ்பரம் பொருந்தியிருந்தது.சேகர் சினிமா ஹீரோ போன்ற அழகாக இருந்தான்.யார்பார்வையையும் தவிர்க்க முடியாத அளவுக்கு அவன்உதட்டில் எப்பவும் சிறு புன்னகை ஒன்று இருக்கத்தான் செய்தது. அது அவன் தன்நம்பிக்கையை சுட்டிகாட்டியது. அவன் பேச்சு எல்லோருக்குமே ஸ்வாரஸ்யமாகத்தான் இருந்தது. எல்லோரையும் தன்பக்கம் வசீகரிக்கும் குணம். அந்தகுணம் அவ்ளவ் சுலபமாக எல்லோருக்கும் இருக்க முடியாது. அவர்கள் கலகலப்பாக உல்லாசபறவைகளாக இருந்தார்கள். ரஞ்சிதாவும் அழகாத்தான் இருந்தாள். காலம் போன்ற கோலம் என்பது போல் ஜீன்சும் டி ஷர்ட்டும் அணிந்திருந்தாள்.