நினைக்காத நேரமேது

(5)
  • 30.4k
  • 1
  • 10.4k

அன்றைய நாளின் ஏகாந்த காலை. அந்த வானம் தன் இடையினில் உடுத்தியிருந்த கருப்புநிறத் தாவணியை கலைந்து, நீலவண்ணச் சேலையை அணிந்து கொண்டிருந்தது. பறவைக் கூட்டங்கள் ஒலி எழுப்பிக் கொண்டே, சந்தோஷ சிறகசைப்புடன் அந்த கடலைக் கடந்து கொண்டிருந்தன. எழுந்தான் செங்கதிரோன், அவன் திசைப்பட்ட இடம் எல்லாம் விழுந்தது தங்கத்தூறல். வெளியெல்லாம் ஒளியின் வீச்சு. அந்த இயற்கை பல மாயா ஜாலங்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தது. அன்றைய விடியலை ரசித்தபடி சுறுசுறுப்புடன் வந்தாள் திவ்யா.

1

நினைக்காத நேரமேது - 1

நினைக்காத நேரமேது... நினைவு-1 அன்றைய நாளின் ஏகாந்த காலை. அந்த வானம் தன் இடையினில் உடுத்தியிருந்த கருப்புநிறத் தாவணியை கலைந்து, நீலவண்ணச் சேலையை அணிந்து கொண்டிருந்தது. கூட்டங்கள் ஒலி எழுப்பிக் கொண்டே, சந்தோஷ சிறகசைப்புடன் அந்த கடலைக் கடந்து கொண்டிருந்தன. எழுந்தான் செங்கதிரோன், அவன் திசைப்பட்ட இடம் எல்லாம் விழுந்தது தங்கத்தூறல். வெளியெல்லாம் ஒளியின் வீச்சு. அந்த இயற்கை பல மாயா ஜாலங்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தது. அன்றைய விடியலை ரசித்தபடி சுறுசுறுப்புடன் வந்தாள் திவ்யா. ஐந்தரை அடி சந்தனச்சில ...Read More

2

நினைக்காத நேரமேது - 2

நினைவு-2 "அக்கா! இந்த பிராப்ளம் மட்டும் எனக்கு சால்வ் ஆக மாட்டேங்குது. இதுக்குதான் எனக்கு கணக்குன்னாலே கடுப்பாகுது.” அங்கிருந்த சிறுவர்களில் பெரியவனான சதீஷ் மூக்கால் அழ, அலுப்பாக பார்த்தாள். "ஏன்டா, ப்ளஸ் பண்ண வேண்டிய எடத்துல மைனஸ்‌ பண்ணி வச்சா எப்படிடா வரும்? பார்முலா படி போட்டா கரெட்டா வந்துடும். கொஞ்சம் கவனிச்சு போடு!" அவள் எப்படிச் சொன்னாலும் சிறுவனின் மூளையோ ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று சண்டித்தனம் செய்தது. "போங்கக்கா... பக்கம் பக்கமா படிக்கச் சொன்னாக் கூட படிச்சுடலாம். ஆனா இந்தக் நம்பர் கூட்டி கழிச்சு போடுறதுனாலே எனக்கு நாக்கு தள்ளுது.” என வெகுவாய் அங்கலாய்த்துக் கொண்டான் சதீஷ். திவ்யாவைச் சுற்றி பலதரப்பட்ட வயதில் பிள்ளைகள் பதினைந்துபேர்‌ வட்டமாக அமர்ந்திருந்தனர். பள்ளியில் தினசரி கொடுக்கும் அவர்களின் வீட்டுப் பாடங்களை பார்த்து என்னென்ன செய்ய வேண்டும் என சொல்லிக் கொடுக்கும் வேலையை தனதாக்கிக் கொண்டிருந்தாள். "ஏம்மா! நீயே அலுப்பா வந்திருப்ப... ...Read More

3

நினைக்காத நேரமேது - 3

நினைவு-3 பரம்பரை சொத்து முழுவதும் இழந்த நிலையில் தேவானந்தனின் தந்தையும் இயற்கை எய்திவிட, இதற்குமேல் யாரிடமும் வேலை கேட்கவும், உதவி கேட்கவும் கௌரவம் இடம் கொடுக்கவில்லை. தான் மகன் ரவியானந்தனும் கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம். அத்தகைய கையறு நிலையில் தான், உடுக்கை இழந்தவனுக்கு கையாக வந்தார், பள்ளித் தோழரும், குடும்ப நண்பருமான இராமநாதன். பணமாக உதவி செய்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார் எனத் தெரியும். எனவே தான் தேவானந்தனை ஒர்க்கிங் பார்ட்னராகக் கொண்டு இருவரும் தொழில் தொடங்கினர். தேவானந்தன் என்றைக்கும் உடல் உழைப்பிற்கு தயங்கி நின்றதில்லை. ஏற்கனவே கமிஷன் மண்டி நடத்திய அனுபவம் கைகொடுத்தது. எங்கெங்கு நேரடியாகச் சென்றால் குறைந்த விலைக்கு பொருட்களை கொள்முதல் செய்யலாம் என நன்றாகத் தெரிந்து வைத்திருந்தவர், அதைக் கொண்டே தொழிலை நடத்தத் தொடங்கினார். அது ஏறுமுகமாகவே அமைந்தது. இராமநாதன் அலுவலக உள்வேலைகளைப் பார்த்துக் கொள்ள, தேவானந்தன் வெளியே சுற்றித் திரிந்தார். நெல், மஞ்சள், வேர்க்கடலை, ...Read More

4

நினைக்காத நேரமேது - 4

நினைவு-4 ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ பாவம் ராதா யமுனை ஆற்றிலே காற்றிலே கண்ணனோடுதான் ஆட பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட நிழற்படத்தை எடுத்து தன்னவனின் முகம் வருடியவளின் மனம் நிஜம் உணர, கரை தாண்டத் தொடங்கிய கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள் திவ்யா. அவள் சகஜமாவதற்கும் நொடிநேரம் பிடித்தது. பின்னர் எப்பொழுதும் போல் புகைப்படத்திற்கு ‘பை’ சொல்லி மெல்லிய முத்தம் பதித்து முடித்து, தன்னறையை விட்டு வெளியே வந்தாள். அந்த காலை நேரத்தின் வழமையாக பிள்ளைகள் அனைவரும் பள்ளிக்கு தயாராகி விட்டு, சாப்பிடுவதற்கு வந்து அமரத் தொடங்கி இருந்தனர். சதிஷோடு சேர்ந்து திவ்யாவும், அவர்களுக்கெல்லாம் தட்டு எடுத்து வைக்க, தண்ணி வைக்க என்று சிறுசிறு உதவிகளை செய்ய ஆரம்பித்தாள். அங்கு வந்த லட்சுமி, "திவ்யா! உனக்கு டைமாச்சு பாரு! நீ முதல்ல ...Read More

5

நினைக்காத நேரமேது - 5

நினைவு-5 நண்பனின் முன்னேற்றம் கண்டு பொறாமைப்படாமல், அதுவும் தன்னால் கை கொடுத்து தூக்கி விடப்பட்டவன் என்ற எண்ணமும் சிறிதும் இல்லாமல் பேசும் நண்பனைப் பார்த்தவர்க்கு, நட்பு தான் கொடுத்து வைத்தவன் என்றே தோன்றியது. தனது எம்.டி இப்படி மனம் விட்டு பேசுவதைக் கண்ட‌ திவ்யாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் பெர்சனல் விஷயம் பேசும்போது தான் அங்கிருப்பது சரியா என்ற எண்ணமும் எழுந்தது. அதற்குள் அவர்கள் ஆர்டர் ‌செய்திருந்த உணவு வகைகள் ‌வரவும் பேச்சு சற்று மாறியது. "அப்புறம் தேவா! உன் பேரனைப் பத்தி சொல்லு. இப்ப பிசினஸ் வட்டாரத்துலயே அவன் தான் நம்பர் ஒன்னா இருக்காம் போல!" "நம்பர் ஒன், நம்பர் டூ இதுல எல்லாம் எனக்கும் அவனுக்கும் நம்பிக்கை இல்லை ராமா! இன்னைக்கு நாமன்னா... நாளைக்கு இன்னொருத்தர். அதனால நாம செய்யறதை சிறப்பா செய்யணும். அவ்ளோதான்!" "பரவாயில்ல தேவா! உனக்கு கை கொடுக்க பேரன் வந்துட்டான். என் பேரனுங்க ...Read More

6

நினைக்காத நேரமேது - 6

நினைவு-6 மதியம் மணி மூன்றினைத் தொட்டிருந்தது. அந்த நேரத்தில் மதியம் சாப்பாட்டிற்கு, சண்முகம் வீட்டிற்கு வருவது வழக்கம். கட்டிடப் பணிக்குத் தேவையான, சிறு ஆணிமுதல், ஜல்லி, சிமெண்ட், கம்பி என சகலமும் கொண்ட ஹார்டுவேர் கடை அவருடையது. பெரிய பெரிய பில்டிங் கான்ட்ராக்டர்களும், மேஸ்திரிகளும், கைவசம் வாடிக்கையாளர்களாக இருப்பதால், எப்பொழுதும் வருமானத்திற்கு பஞ்சமில்லாத தொழிலாக சென்று கொண்டிருக்கிறது. காலைநேர உணவை முடித்துக் கொண்டு கடைக்குச் செல்பவர், மதியம் மூன்று மணியப் போல் வந்து சாப்பிட்ட பின், சற்றுநேரம் படுத்து ஓய்வெடுப்பது வழக்கம். மறுபடியும் ஐந்து மணிக்கு மேல் தான் கிளம்புவார். அது வரை கடை வேலையாட்கள் பொறுப்பில். இன்றும் வழமை போல், வீட்டிற்கு வந்தார். திவ்யாவின் வண்டியைப் பார்த்தவருக்கு முகத்தில் சிறு யோசனை. "லட்சுமி…! லட்சுமி…!" கணவர் வரும் நேரம் என்பதால் குரல் கேட்டவுடன், அவரும் வெளியே வந்தார். "என்ன லட்சுமி!? திவ்யா சீக்கிரம் வந்துட்ட மாதிரி இருக்கு." "ஆமாங்க... ...Read More

7

நினைக்காத நேரமேது - 7

நினைவு-7 பிள்ளைகள் கவனிப்பு, வீட்டுப் பாடம், இரவு சமையல், சாப்பாடு என அன்றைய நாளுக்குரிய வேலைகள் நேரம் தவறாமல் தன் வருகையைப் பதிவு செய்தன. சதிஷ் படுக்கைக்கு பிள்ளைகளை ஒழுங்கு படுத்திக் கூட்டிச் சென்றான். இரவு நேரம். தனிமை… வழக்கம் போல் பவளமல்லி செடித் திட்டில் திவ்யா!துணைக்கு கைபேசியில் ஒலிக்கும் பாடல்கள். "முழுநிலா எப்பவும் அழகு! பிறைநிலா இன்னும் அழகு... வளர்பிறை நிலாப் பக்கத்துல மின்னுற அந்த ஒற்றை நட்சத்திரம் மேலும் அழகு. அது மின்னுறப்ப நிலவுக்கு மூக்குத்தி மாதிரி எனக்குத் தோனும்!" பிறைநிலவில் பார்வையைப் பதித்திருந்தவள் கூற, "இப்ப எனக்கும் அப்படித்தான் தோணுது. உனக்கு நட்சத்திரம் மூக்குத்தியாத் தோணுது. எனக்கு அதுவே இடமாற்றமாத் தோணுது. மின்னுற நட்சத்திரம் மீது சிறு முத்தம்." எனத் தொடராமல் நிறுத்தியவனை, வான்பிறையில் தன் பார்வையைப் பதித்திருந்தவள், 'என்ன!?” என்பது போல் பார்க்க... போர்டிகோ தூணில் கைகட்டி சாய்ந்து நின்றவனது பார்வை, நிலவில் இல்லாமல் ...Read More

8

நினைக்காத நேரமேது - 8

நினைவு-8 கணவனும் மனைவியும் செய்வதறியாது நின்றது ஒரு நிமிடம்தான். பின்னர் லட்சுமி ஜாடையாக, ‘பேசிப் புரிய வைங்க’ என்று கோடிட்டுக் காட்டவும் தொண்டையை செருமிக்கொண்டு மீண்டும் ஆரம்பித்தார் சண்முகம். “கோபப்படாதே திவிம்மா!” “இது கோபம் இல்லை அங்கிள், என்னோட அதிர்ஷ்டம். அவங்க சுயநலம் இத்தனை சீக்கிரமா வெளிவந்ததுல நான்தான் தப்பிச்சேன்.” என்று பெருமூச்செறிந்தாள் திவ்யா. "சரி, அவங்கள விடு... உன் மேல அவங்களுக்கு அக்கறை இல்ல. எங்களுக்கு இருக்கா, இல்லையா!?" "இல்லைன்னு சொல்லுவேனா?" "அப்படினா, எப்பப் போய் நாங்க பேசட்டும்?" சண்முகம் கேட்க "ஏன் அங்கிள்? இப்ப நான் போனா அவங்க அம்மா என்னைய ஏத்துக்க மாட்டாங்கனு நினைக்கிறீங்களா?" "அவங்க அம்மா உன்னைய ஏத்துக்கறதாம்மா பிரச்சனை?" "கண்ணா மேல சந்தேகமா அங்கிள்?" "கண்டிப்பா கண்ணா மேல இல்லம்மா... சந்தேகம் எல்லாம் சத்யானந்தன் மேல தான். ஆனா எடுத்து சொன்னோம்னா கட்டாயம் புரிஞ்சுக்குவார் திவிம்மா!" "நானும் அதையே தான் அங்கிள் சொல்றேன். ...Read More

9

நினைக்காத நேரமேது - 9

நினைவு-9 நாட்கள் தன்போக்கில் நகர, நல்லதொரு நாளில் தேவானந்தன், நாதன் அன்ட் கம்பெனியை, ஆனந்தன் அன்ட் க்ரூப்ஸோடு இணைத்துக் கொண்டு எம்.டி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார். அன்று, வரவேற்புக்கு எல்லாம் ரெடியா இருக்காம்மா?" என்று ராமநாதன் வினவ, "எல்லாம்‌ ரெடி சர்." என்றாள் திவ்யா. "தேவானாந்தனுக்கு மஞ்சள் கலர்னா ரெம்ப பிடிக்கும். பொக்கே எல்லோ ஃப்ளவர்ஸ் தானம்மா சொல்லியிருக்க?" "ஆமா சர்." என்றாள். அலுவலக ஊழியர்கள் அனைவரும் தமது புது எம்.டி.யை வரவேற்க ஆவலாய்க் காத்துக் கொண்டிருந்தனர். தேவானந்தனின் கார் அலுவலக வாயிலை வந்தடைந்தது. தகவல் ராமநாதனுக்குத் தெரிவிக்கப்பட்டது. கார் டிரைவர் இறங்கிக் காரின் பின் கதவைத் திறந்து விட, தேவானந்தன் இறங்கினார். ஒரு கணம் திவ்யாவின் கண்கள், தாத்தாவோடு சேர்த்துப் பேரனையும் எதிர்பார்த்ததோ என்னவோ? சற்றே சோர்ந்தது. திவ்யா ஊழியர்கள் சார்பாக பூங்கொத்துக் கொடுத்து வரவேற்க, இராமநாதன் தன் நண்பனுக்கு சந்தன மாலை போட்டு வரவேற்றார். "என்ன ராமா? அரசியல்வாதிய ...Read More

10

நினைக்காத நேரமேது - 10

நினைவு-10 அலுவலகம் வந்த இருவரும், ஏற்கனவே ஒரு மணி நேர‌ பெர்மிஷன், ஒன்றரை மணிநேரமாகிப் போனதில், வந்ததும்‌ வேலையில் கவனமாயினர். திவ்யாவை அழைத்த‌ மேனஜர், “நீ உடனே எம்.டி உன்னை வந்து பார்க்கச் சொன்னாரும்மா!” என்று தகவல் கூறினார். முன்தினமே தேவானாந்தன் தன்னிடம் ஆடிட்டிங் பற்றிக் கூறியிருந்ததால், அது சம்பந்தப்பட்ட சில ஃபைல்களை எடுத்துக் கொண்டு, எம்.டி‌ அறை‌ நோக்கிச் சென்றாள். அறைக்கதவை தட்டி விட்டு, "எக்ஸ்கியூஸ்மீ சர்!" எனக் கேட்டுக்‌ கதவைத் திறந்து உள்ளே சென்றாள். "யெஸ்... கம் இன்!" ஆணவனின் கம்பீரக் குரல் கேட்டு, சட்டென அவள் இதயம் இயங்க மறுத்தது. இல்லை... இவ்வளவு நாட்களாக இயந்திரமாக இயங்கிய இதயம், இக்குரல் கேட்டுத் தன் இயக்கத்தை மீட்டெடுத்ததா?கனவா? கற்பனையா? அல்லது நிகழ்காலத்தில் கரையும் நிகழ்வுகளா! எத்தனை நாள்‌ ஏக்கம்... தவிப்பு! வேண்டுதல், எதிர்பார்ப்பு, இந்த‌ நொடிக்காக! சமீப காலமாகவே இப்படியொரு சந்திப்பு என்றாவது ஒருநாள் நிகழும்‌ ...Read More

11

நினைக்காத நேரமேது - 11

நினைவு-11 தன்னவனைப் பார்த்து விட்டால் தனது காதலை வெளிப்படுத்த முடியாமல் இருக்க முடியாதென்று நினைத்து தான் திவ்யாவும் இவ்வளவு நாட்களாக ஒதுங்கி இருந்தது. அதற்கே அவள் சொல்லிமாளாது. ஆனால் தன்னவனை நேரில் சந்தித்தப் பிறகு, இனியும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமென்று அவளுக்குத் தோன்றவில்லை. சாப்பாட்டைக் கிண்டிக்கொண்டே யோசனையோடு திவ்யா அமைதியாக இருக்க, "ஏன் திவி? இப்படி வாழ்ற வயசுலவெளிநாட்டுல போய் உக்காந்துகிட்டு காச மட்டும் சம்பாரிச்சு என்ன பண்ணப் போறீங்க?" திவ்யாவைப் பற்றி அவள் கூறியதை வைத்துக் கேட்டாள் நந்தினி. 'என்ற வூட்டுக்காரர் வெளிநாட்டுல‌ இல்லைங்கோ, எம்.டி. ரூம்ல தான் உக்காந்திருக்காருங்கோ அம்மணி!' என்று கூறினால் எப்படி‌ இருக்கும் என்று எக்குதப்பாக நினைத்தது திவ்யாவின் மனம். அப்படி நினைத்துப் பார்த்தவளின் முகத்தில் சட்டென்று சிறு புன்னகை முகத்தில் தோன்றவும் செய்தது. அதைப் பார்த்து தோழியின் மேல் கோபம் கொண்டாள் நந்தினி. "நான் என்ன இப்ப காமெடியா பண்ணேன்? காலம் ...Read More

12

நினைக்காத நேரமேது - 12

நினைவு-12 "ம்ம்மாஆஆ... என்னம்மா இது?" வீடே அலறுமாறு கத்திக் கொண்டே இருந்தாள் திவ்யா. "ஏன்டி இப்படிக் கத்துற?" பட்டுப் புடவையின் மடிப்பை நீவியவாறேக் கேட்டுக்கொண்டு சரஸ்வதி "ஏம்மா… வெறும் சாம்பார மட்டும் வச்சுட்டுப் போனா எப்படிம்மா சாப்டறது? பொட்டோட்டோ ஃப்ரை எங்கம்மா?" ஆத்திரத்துடன் கேட்க, "அடத் தீனிப் பண்டாரமே… இதுக்கா இப்படிக் கத்துன? ஏற்கனவே அந்த சைஸ்ல தான இருக்க? இதுல எப்பப்பாரு உருளைக்கிழங்கு ஃப்ரை கேக்குது." என்று கன்னத்தில் இடித்தார். "வெறும் சாம்பார் சோத்த எப்படிம்மா சாப்டறது, தொட்டுக்க ஒன்னுமில்லாம?" "சாப்பிடும் போது அப்பளம் போட்டுக்க… ஃப்ரிட்ஜ்ல தயிர் இருக்கு. ஊறுகா எடுத்துக்க… ஏழு கழுத வயசாகுது இன்னும் வெளிய கிளம்பினா எல்லாம் செஞ்சு வச்சுட்டுப் போக வேண்டியதா இருக்கு." என்று பேச்சோடு பேச்சாக நொடித்துக் கொண்டார் சரஸ்வதி. "அப்பா... இங்க பாருங்கப்பா... குழம்ப மட்டும் வச்சுட்டுப் போறாங்க, கேட்டா நீயே செஞ்சுக்கனு சொல்றாங்கப்பா." என்று கிளம்பித் தயாராகி ...Read More

13

நினைக்காத நேரமேது - 13

நினைவு-13 இரவு நேரமாதலால் அங்கு நடந்த விபத்து அறியப்பட சற்று தாமதமானது. அதற்குள் அவ்வழி சென்ற நம்நாட்டு இரு குடிமகன்கள், கீழே கிடந்தவனை, உயிர் சோதனை போல் சென்று, யாரும் அறியா வண்ணம், விபத்திற்கு உள்ளானவனின் செயின், பர்ஸ் முதலியவைகளை கைப்பற்றிக் கொண்டனர். மோதிரம் சற்று இறுக்கமாக இருந்ததால், கழற்றுவதற்குள் கூட்டம் சேர ஆரம்பிக்க, நல்லவர்களாக நூற்றியெட்டுக்கு அழைப்பை விடுத்து விட்டு, சற்றுத் தொலைவில் கிடந்த அவனுடைய பேக்கையும் எடுத்துக் கொண்டு நழுவினர். 'இருட்டறதுக்குள்ள வந்துடறதா சொன்னாங்க... இன்னும் காணோம். வீட்ல புள்ள தனியா பயந்துகிட்டு இருப்பாளே, சீக்கிரம் வரணும்னு எண்ணம் இருக்கா? நம்மகிட்ட மட்டும் இப்படியிரு அப்படியிருனு ஆயிரத்தெட்ட சொல்ல வேண்டியது.' திவ்யாவின் மனம் இன்னதென்று முறையில்லாமல் வெடுவெடுத்துக் கொண்டிருந்தது. பெற்றோர் வரத் தாமதமானதால் வந்த படபடப்போ? இல்லை அவர்களுக்கு நேர்ந்த முடிவை உள்ளுணர்வு உணர்த்தியதோ? ஏதோ ஒன்று அவளை அலைக்கழித்தது ஃபோனில் அழைப்பு மணி ஒழிக்க, அழைப்பை ...Read More

14

நினைக்காத நேரமேது - 14

நினைவு-14 தனித்திருந்தவன் தன்னைச் சுற்றி மீண்டும் ஆழ்ந்து கவனிக்க, அது மருத்துவமனை என்பதும், தனக்கு சிகிச்சை நடைபெறுகிறது என்பதும் மெதுமெதுவாகப் புரிய ஆரம்பித்தது. எனினும் எவ்வளவு தான் யாரென்பது மட்டும் அவனுக்கு சுத்தமாய் பிடிபடவில்லை. ஆழ்ந்து யோசிக்க யோசிக்க தலைவலி தான் மிஞ்சியது. ‘கடவுளே இதென்ன சோதனை? நான் யார்!” உள்மனதின் அலறல் அவனது மனதை வண்டாய் குடைந்து பாடாய்படுத்தியது. அது அரசு மருத்துவமனை. துணைக்கும் யாருமில்லை. உடனிருப்பவர்களின் உந்துதலை, பணியாளர்களுக்கான சிறப்பு கவனிப்புகளைப் பொறுத்து தான் நோயாளிக்கும் சிறந்த கவனிப்பும் இருக்கும். அதிலும் அந்த மருத்துவமனையில் பிரசவம், குடும்ப கட்டுப்பாடு மற்றும் ஆரம்பகட்ட சிகிச்சைகள் மட்டுமே நடைபெறும் வகையில் இருந்தது. சிறப்பு சிகிச்சைக்கோ, மேல்மட்ட அறுவை சிகிச்சை முதலியவற்றிற்குநோயாளிகள் கோவை ஜி.எச்.தான் அனுப்பி வைக்கப்படுவர். விபத்து நடந்த இடம் அவினாசிக்கும் கோவைக்கும் இடையில் என்பதால் அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தனர். மருத்துவருக்கும் அவன் நிலைமை சிறிது சந்தேகத்தை ...Read More

15

நினைக்காத நேரமேது - 15

நினைவு-15 "மாமா... சத்யா ஃபோன் ஏதும் பண்ணினானா?" பெரும் கவலையுடன் கேட்டார் மங்கையர்க்கரசி. இதோடு இவர் கேட்பது நூறாவது முறையோ ஐநூறாவது முறையோ! அது அந்த கூட தெரியாது. எத்தனை முறை கேட்டாலும் தனது பதில் ஒன்றே தான் என்ற முறையில் பதிலளித்தார் தேவானந்தன். "இல்லைமா, உனக்கும் பண்ணலியா?" இரவு சாப்பாட்டை மேஜையில் எடுத்து வைத்தவாறே மங்கையர்கரசி, மாமனாரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். "எல்லாம் நீங்க கொடுக்கிற இடம் தான் மாமா! போனா... போன வேலையை முடிச்சோமா வந்தோமானு இருக்கணும். அப்படியே நாடோடி மாதிரி ஊர் சுத்த கிளம்பிற வேண்டியது." "இந்தக் காலத்துப் பிள்ளைகளை ரொம்ப இறுக்கிப் பிடிக்க‌ முடியாதும்மா. பிடிக்கவும் கூடாது. அதுவும் என் பேரன் தகப்பன் சாமி மாதிரி. சின்ன வயசுலயே அதிகப்படியான அனுபவம். எது செய்தாலும் சரியாத்தான் இருக்கும்." மெச்சுதலாய் சொன்ன மாமனாரின் சமாதானங்கள் எதுவும் தாய் மனதை குளிர்விக்கவில்லை. தாத்தாவிற்கு பேரனின் மீது அபார நம்பிக்கை. ...Read More

16

நினைக்காத நேரமேது - 16

நினைவு-16 "திவிக்கா சிரிக்காதிங்க. ஒரு அக்காவா இந்த எடத்துல என்ன சொல்லணும்?" தோரணையுடன் சதீஷ் கேட்க, "என்னடா சொல்லணும்?" திவ்யாவும் குறும்புப் பேச்சில் இணைந்து கொள்ள, கருப்பா இருந்தாலும் களையா இருக்கான்னு சொல்லணுமா... இல்லையா?'' எதிர்கேள்வி கேட்டு அவளின் வாயடைத்தான் சதீஷ். "எப்படிடா மனசறிஞ்சு பொய் சொல்லுவாங்க? அப்படி சொன்னா நம்ம மனசே நம்மைச் சுடும்னு வள்ளுவர் தாத்தா சொல்லியிருக்காருல...." என்று தேவி நக்கலடிக்க, "ம்ம்... அவரே தான் நன்மைக்காக பொய் சொல்லலாம்னும் சொல்லியிருக்கார்." என்றான். “பாருங்க க்கா... இவன் இஷ்டத்துக்கு ரெண்டு வரி திருக்குறளை எப்படியெல்லாம் யூஸ் பண்ணிக்கிறான்னு!” தேவி கேலி பேசிய நேரத்தில், "அப்படின்னா பொய்யாவாவது நீ அழகன்னு சொல்லச் சொல்றியா?" என்றாள் திவ்யா. "ஒரு பொய்யாவது சொல் அக்கா… அழகன் நான் தானென்று… அந்தப் பொய்யில்… உயிர் வாழ்வேன்," என்று அவன்‌ பாட ஆரம்பிக்க, "டேய், போதும்டா நிப்பாட்டு. வரவர உன் இம்சை தாங்கலை." என்று ...Read More

17

நினைக்காத நேரமேது - 17

நினைவு-17 தேவானந்தன் முடிந்த அளவிற்கு தனது பதட்டத்தை வெளிக்காட்டாமல் இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார், தனது பதட்டம் மருமகளை பாதித்து விடக்கூடாது என்பதற்காக! தாலிக்கொடி உறவை தொப்புள் கொடி உறவையே பற்றுக்கோலாகக் கொண்டு வாழ்பவள். தனக்கும் அதே நிலைமை தான், எனினும் பதறிய காரியம் சிதறும் என்ற அனுபவ அறிவு கொண்டு நிதானமாக நிலைமையைக் கையாள முயல்கிறார். மங்கையர்கரசி மகனைப் பற்றி விசாரிக்கும் பொழுதே, ஆறுதலாக பதிலுரைத்தாலும், பொறுப்புணர்ந்த பேரன், 'இத்தனை நாட்கள் தொடர்பு கொள்ளாமல் இருக்க மாட்டானே!' என்ற எண்ணம் தோன்றத் தான் செய்தது. எனினும் பேரன் வருடத்தில் ஒருமுறையோ, இரண்டு முறைகளோ இவ்வாறு செல்வது வழக்கம் தானே. முன்பெல்லாம் தனியாக இதற்கென திட்டமிட்டு செல்பவன், தாத்தா மற்றும் அன்னையின் தவிப்பு காரணமாக வியாபார நோக்கமாக செல்லும் இடங்களிலேயே, தனது ரோட் ட்ரிப்பை வைத்துக் கொள்கிறான். எப்பொழுதும் வியாபாரம் பற்றியே சிந்திப்பவனுக்கு கொஞ்சம் மாற்றமும் தேவை தானே என்று ...Read More

18

நினைக்காத நேரமேது - 18

நினைவு-18 மறுபடியும் திவ்யா சோக மோடுக்குப் போக அதைக் காணச் சகிக்காதவனாய், கேலி பேச ஆரம்பித்தான் சத்யானந்தன். "ஏங்க! காஃபி கொடுத்து டெஸ்ட் பண்ணுனீங்க… வேற என்னை எலியாக்க?" என்றவனிடம், "சாரி கண்ணன்! ஒரு நாளைக்கு ஒரு டெஸ்ட்டுதான். எலி தாங்க வேண்டாமா? அதுக்கு ஏதாவது ஆகிட்டா இன்னொன்றுக்கு நான் எங்கே போறது? வான்டடா இப்படி வந்து சிக்குற எலி கிடைக்கறது ரொம்ப ரேர் கண்ணன்." அவள் கூறியதைக் கேட்டு அவன் சிரிக்க, அவளும் சிரித்தாள், வெகு நாட்கள் கழித்து மனம் விட்டுப் பேசியதில். எடுத்து வந்த பொருட்களை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்த பாப்பாத்தியும், திவ்யாவின் சிரிப்பைக் கேட்டு, 'மறுபடியும் இந்தப்புள்ள பழைய மாதிரி கலகலப்பாக மாறணும்.' என்று எண்ணிக் கொண்டார். காஃபியைக் குடித்துவிட்டு கிளம்பியவன், பாப்பாத்தியை அழைத்து, "தேவையில்லாம வெளிய வராதிங்க ஆத்தா! கேட்டை நல்லா பூட்டிக்கோங்க! அவங்க சொந்தக்காரங்க யாராவது வந்துருவாங்க. திவ்யாவை வேற நல்ல ட்ரெஸ்ஸா ...Read More

19

நினைக்காத நேரமேது - 19

நினைவு-19 சண்முகமும் லட்சுமியும் ஓரளவுக்கு திவ்யா வீட்டில் பொருத்திக் கொண்டனர். பாதி வெள்ளாமையில் இருந்த விளைநிலங்களை ஆட்களிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு திவ்யாவின் வீட்டிற்கு குடி விட்டார்கள். அவர்களிடம் பிள்ளைகள் கேள்வி மேல் கேள்வி கேட்க, திவ்யா அக்காவுக்காக சிறிது நாள் தங்கி விட்டுப் போகலாம் என சொல்லப்பட்டது. தோட்ட வீட்டில் விசாலமாக இருந்தவர்கள், சற்று சிரமப்பட்டாலும் பழகிக் கொண்டனர். சண்முகமும் பிள்ளைகளை, எந்த இடத்திலும் பொருத்திப் போகும்படியாகத் தான் வளர்த்திருந்தார். எனினும் புது இடம் சில பிள்ளைகளுக்கு பிடித்தமாயும், சில பிள்ளைகளுக்கு பிடித்தமின்மையாகவும். "அதென்னமா கணக்கு? பதினஞ்சு பிள்ளைக..." என்று கண்ணன் எடுத்து வந்த பொருட்களை ஒதுங்க வைக்க உதவிக் கொண்டே கேட்டான். "அதுவா கண்ணா... இவர் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் பனிரெண்டு பிள்ளைகளாம்! அந்த காலத்துல அதெல்லாம் சாதாரணம். இவரும் சின்னப் பிள்ளையா இருக்கும் போது தாத்தாகிட்ட, நான் உங்களை முந்தி காட்டுறேனு பந்தயம் கட்டுனாராம்." என்று நமட்டுப் ...Read More

20

நினைக்காத நேரமேது - 20

நினைவு-20 காருண்யா பல்நோக்கு மருத்துவமனை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. காத்திருப்போர் வரிசையில் சண்முகம், கண்ணன் மற்றும் திவ்யா பெரும் குழப்பத்துடன் அமர்ந்திருந்தனர். அந்த அறைக்கு வெளியே நாராயணன் நியூராலஜிஸ்ட் எனும் பெயர்ப்பலகை ஒட்டப்பட்டிருந்தது. ‘அவர் என்ன கூறப் போகிறார்?’ என்ற பதற்றம் சண்முகம் முகத்தை விட, மற்ற இருவர் முகத்திலும் அதிகமாகத் தெரிந்தது. ஏற்கனவே அவரை சந்தித்து, அவரது பரிந்துரையின் பேரில், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரிப்போர்ட்டோடு, அவரை சந்திக்க இப்பொழுது காத்திருக்கின்றனர். "கண்ணன்!" மணியடித்து பெயர் அழைத்தவுடன் மூவரும் உள்ளே சென்றனர். டாக்டர் நாராயணன்... அறுபதுகளைக் கடந்த படிப்பும் அனுபவமும் கற்றுத் தந்த, நிதானம் நிறைந்த முகம்.அறைக்குள் வந்தவர்களை ஆழ்ந்து பார்த்தார். மூவருக்கும் இருக்கையைக் காட்டியவர், ரிப்போர்ட்டை வாங்கிப் பார்க்க ஆரம்பித்தார். சில நிமிட பார்வையிடலுக்கு பிறகு நிமிர்ந்தவர், "இன்னும் கண்ணனோட குடும்ப விபரம் எதுவும் தெரியலையா சண்முகம்?" அவனின் முந்தைய விபத்து விபரம் தெரிந்தவராகக் கேட்க, "இன்னும்‌ எதுவும் ...Read More

21

நினைக்காத நேரமேது - 21

நினைவு-21 மறுநாள் வழக்கம்போல் வேலைகள் நடக்க, எழுந்து வந்தவளைப் பார்த்தவன், அவளது முகத்தில் சிறுவாட்டத்தைக் கண்டான். கல்லூரி கிளம்பும் அறிகுறி அவளிடமில்லை. "திவ்யா! இன்னைக்கு காலேஜ் எனக் கேட்டான் கண்ணன். "இல்ல கண்ணன்... போர்ஷன் முடிச்சுட்டாங்க! இனி படிக்கிற வேலை தான். அது தான் பிள்ளைகளுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு லீவு போட்டுட்டேன்!" என்று சோர்வாக கூறியவள், சமையலில் உதவ அடுக்களை சென்றுவிட்டாள். எனினும் அவள் முகத்தில் பழைய சுரத்தையில்லை என்பதைக் கவனித்தான் கண்ணன். பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பியதும், கண்ணனும் கடைக்கு கிளம்பினான். அனைவரும் கிளம்பியவுடன், திவ்யாவும் செல்லாத்தாளை உடன் அழைத்துக்கொண்டு வெளியே சென்று வந்தாள். மதியம் வீட்டிற்குத் தேவையான சாமான்களை வாங்கிக் கொண்டு, சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்தான். பவளமல்லி திட்டில் திவ்யா அமர்ந்திருப்பதைப் பார்த்தவன், சாமான்களை உள்ளே வைத்து விட்டு அவ்விடம் வந்தான். அவள் முகத்தைப் பார்க்க ஏதோவொரு மாற்றம். ஆனால் நன்றாக இருந்தது. உற்றுப் பார்க்க அவள் மூக்கில் ...Read More

22

நினைக்காத நேரமேது - 22

நினைவு-22 தலையில் நெருக்கக் கட்டிய முல்லைப்பூச்சரம், ஆரஞ்சும் இளஞ்சிவப்பும் கலந்த சல்வாரில் அவனது தேவதை பவளமல்லி திட்டில் அமர்ந்திருந்தாள். மாடியில் இருந்தவாறு கைப்பிடிச் சுவரில் குனிந்து குற்றி ஊன்றியவாறே அவளை ரசித்துக் கொண்டிருந்தான் கண்ணன். கையில் அவன் மாலையில் கொடுத்த வரைபடத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது பெற்றோருடன் அவளும் சேர்ந்து எடுத்த நிழற்படம் பென்சில் ஓவியமாய் அவள் கைகளில், நேர்த்தியாக வரைந்து கொடுத்து இருந்தான். பிள்ளைகள் மாலை பள்ளி விட்டு வந்ததும் தேவியை அழைத்த கண்ணன்,"தேவி உனக்கு பூக்கட்ட தெரியுமா?" எனக்கேட்க, "மாலைக்கட்டே கட்ட தெரியும்ண்ணே... யூ டியூப்ல பாத்து கத்துக்கிட்டேன்." என்றாள். "அதை‌ இன்னொரு நாளைக்கு கட்டிக்கலாம். இப்ப, கொடியில் இருக்க முல்லை பூவைப் பறிச்சு தலையில் வைக்கிற மாதிரி சரமா கட்டிக் கொடுடா ம்மா!" என்று கேட்க, "எதுக்குண்ணே? புதுசா பூவெல்லாம் கட்டச் சொல்றீங்க! கடையில பூஜைக்கு வேணுமா? இன்னைக்கி வெள்ளிகிழமை கூட இல்லியே?' என்று கேள்வி ...Read More

23

நினைக்காத நேரமேது - 23

நினைவு-23 கையில் இருந்த சாம்பார் வாளி தெறித்து கீழே விழுந்து சிதறி இருந்தது. கண்ணன் அதிர்ச்சியில் கன்னத்தைப் பிடித்தவாறு எதிரில் நின்றவரைப் பார்க்க, மங்கையர்க்கரசியோ எரிமலைக் கொதித்துக் கொண்டிருந்தார். மனதின் படபடப்பு இன்னும் அடங்கவில்லை அவருக்கு... ‘எங்கிருக்கிறானோ… எப்படியிருக்கிறானோ…’ என்று தெரியாமல் இத்தனை நாட்களாக தவித்த தவிப்பு, மகனை நேரில் கண்டவுடன் கோபமும் அழுகையுமாக வெளிப்பட்டது. காரை விட்டு இறங்கி, உள்ளே நுழைந்தவரின் கண்களில் பட்டது, உணவுக்கூடத்தில் தோளில் சிறு துண்டும், சாதாரண கைலி டிசர்ட்டில், சாம்பார் வாளியுடன் பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்ப, லட்சுமிக்கு உதவிக் கொண்டு இருந்த தன் மகனைத் தான்! துக்க வீட்டிற்கு சென்றவர்கள் இன்று காலையில் தான் வந்தனர். திவ்யாவும் கல்லூரிக்கு செல்லக் கிளம்பி அப்பொழுது தான் வெளியே வந்தாள். அவர்களின் பரபரப்பான தினசரி ஆரம்பமாகி இருந்தது. அந்த நேரத்தில் தான் இந்த களேபரம். "என்னடா சத்யா இது... பிச்சைக்கார வேஷம்?" தாளமுடியாமல் கோபத்துடன் கேட்டார் ...Read More

24

நினைக்காத நேரமேது - 24

நினைவு-24 எல்லோர் முகத்திலும் ஆச்சரியத்தின் வெளிப்பாடு அப்பட்டமாகத் தெரிய, நொடிநேரம் பேசவும் மறந்தனர். "இவ்ளோ பெரிய ஆளுங்களா இருக்கீங்க... எப்படி என்னை இவ்வளவு நாளா தேடாம என்று கண்ணன், தானாகவே முன்வந்து கேட்டான். "நாங்க உன்னை சூரத்துலயும், மும்பை, கோவானுல தேடிட்டு இருந்தோம். நீதான் நாடோடி மாதிரி அப்பப்ப‌ ரோட் டிரிப் போறவனாச்சே!" என்று மங்கையர்க்கரசி கூறினார். "அம்மா! நாங்க உங்களை எப்படி நம்புறது?" என்ற சண்முகம் கேள்விக்கு, "சார்… கூகுள்ல போட்டாலே இவன் விபரம் வருமே! இளம் தொழிலதிபர்கள் லிஸ்ட்ல முதல் ஆளா இருப்பானே! நீங்க எப்படி கண்டுபிடிக்காம விட்டீங்க?" என்ற விஷவாவின் கேள்விக்கு, "நாங்க, எங்க கண்ணனை இவ்ளோ பெரிய ஆளா எதிர்பாக்கல தம்பி." என்றார் லட்சுமி. "இவன் கையில இருக்கிற மோதிரத்துல எஸ்.ஏ.னு லெட்டர்ஸ் இருக்கும். சத்யானந்தன் தான் அது. அவங்க அப்பா இறந்த பின்னாடி என்னோட மாங்கல்யத்துல செஞ்ச மோதிரம் அது." என்று மங்கையர்க்கரசி ...Read More