எல்லையற்ற லோகம் சில வாரங்களுக்குப் பிறகு , ஏத்தியன் எல்லையற்ற லோக வாயிலுக்கு முன் நின்று அதைப் பார்த்து.
அவர் கூறினார்:
> “ என்ன இந்த இடத்திலிருந்து பல கற்கள் அனுப்பப்படுகின்றன. சில சிறியவை, சில பெரியவை. ஆனால் ஒவ்வொன்றும் தனியாக செல்கின்றன... அது மட்டும் இல்லாமல் என்ன அந்த எதிர்ப்புறமும் வாயில் இருக்கு ”
பண்டைய மனிதர்கள் விளக்கினர்:
>"சொல்லப்போனால் இதுக்கு முன்னாடி இந்த எல்லையற்ற லோகத்திலிருந்து போற கற்கள் வெளிப்புற வெற்றிட ஒன்று இரண்டெல்லாம் தாண்டிதான் மூன்றுக்கு போற மாதிரி இருந்துச்சு .
எப்போ வெளிப்புற வெற்றிட இரண்டுக்குள்ள நாங்க அந்த தீய ஆட்சியாளர்களை போட ஆரம்பிச்சமோ அப்ப நாங்க இத எல்லையற்ற லோகத்தில இருந்து நேரடியா வெளிப்புற வெற்றிட மூன்றுக்கு போற மாதிரி வாயில்களை அமைச்சிட்டோம். இதனால எல்லையற்ற லோகத்தில இருந்து வர கற்கள் சீக்கிரம் அங்க போய்சேர்றது மட்டும் இல்லாம அது வெடிச்சு அந்த படைப்பு உருவாகி separateverseக்கு போய்விடும்
அதுக்கப்புறம் நீங்க கேட்ட மாதிரி சிறிய கற்கள் வந்து பிரபஞ்சங்கள் . அவற்றில் பெரும்பாலானவை படைப்பாளர்களைக் கொண்டிருக்கவில்லை. இவை அனைத்தும் எல்லையற்ற லோகத்துக்குள்ளேயே உருவாக்கப்பட்டன, பின்னர் அவை வெளிப்புற வெற்றிட 3 குள் போய். பெருவெடிப்புக்குப் பிறகு, அவை எப்போதும் போல separateverse வாயில் குள் நுழைகின்றன.”
> “ஆனால் கற்கள் பெரியதாக இருக்கும்போது... அவை படைப்பாளர்களை உள்ளே கொண்டு செல்கின்றன உதாரணமாக"
அவர்கள் தங்கள் தெய்வீக சக்திகளை பயன்படுத்தி Aethionக்கு வெளிப்படுத்தினர் மற்றும் விளக்கினார்கள்:
> “அதில் இந்த இரண்டு அசாதாரணமான சர்வ லோகங்கள் தான் … இது போன்ற சர்வ லோகங்கள் மிகவும் பரந்த மற்றும் சக்திவாய்ந்தவை. அவை இதுவரை அனுப்பப்பட்ட மிகப்பெரியவை. நீ கொன்ன சில தீய ஆட்சியாளர்கள் இதுக்குள்ள போனா அவங்க திரும்பி வருவாங்களான்னு சந்தேகம்தான்
> “நாங்கள் இதையெல்லாம் மிகுந்த முயற்சியால் பாதுகாத்தோம். ஆனால் ஜாரியன் அதையெல்லாம் அழித்துவிட்டு, தனது சொந்த சர்வ லோகத்தை உருவாக்கத் திட்டமிட்டார். அதுதான் ஜாரியனின் இறுதி இலக்கு. ஆனால் நீங்கள் ஜாரியனையும் அந்தத் திட்டத்தையும் ஒன்றாக அழித்துவிட்டீர்கள்.”
> “சரி, இப்போது நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிப்போம்: எல்லையற்ற லோகத்திலிருந்து ஒரே ஒரு கல் ஏன் ஒரே நேரத்தில் பயணிக்கிறது?”
> “முதலில், ஒரு கல் வெளிப்புற வெற்றிடம் 3 இல் நுழைகிறது. அது ஒரு பெருவெடிப்பைத் தூண்டுகிறது, இது ஒரு பிரபஞ்சத்தை அல்லது வேறு சில அண்டப் படைப்பை உருவாக்குகிறது. அந்த படைப்பு முடிவடைந்து பாதுகாப்பாக separateverseல் நுழைந்தவுடன்... அதன் பிறகுதான் எல்லையற்ற லோகத்திலிருந்து வெளிப்புற வெற்றிடம் 3க்கு மற்றொரு கல் அனுப்பப்படும்.”
> “உங்களிடம் இன்னும் கேள்விகள் இருந்தால், அவை அனைத்தும் தீர்க்கதரிசன புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் புரிந்துகொள்ள நீங்கள் அதைப் படிக்கலாம்.”
ஏதியன் கூறினார்:
> “நான் தீர்க்கதரிசன புத்தகத்தைப் படிக்க விரும்புகிறேன்.”
பண்டைய மனிதர்கள் அதை அவரிடம் கொண்டு வந்தனர்.
ஏதியன் மீதமுள்ள தகவல்களை உள்ளே படித்தபோது, அவரது அறிவு மேலும் அதிகரித்தது.
பின்னர், அவர் பரந்த எல்லையற்ற லோகத்தை பார்த்து கூறினார்:
> “அப்படியானால் எல்லாம் இங்கிருந்துதான் வருகிறது, இல்லையா? ம்ம்ம்... ஆனால் யாரும் அதில் நுழைந்ததில்லையா? நம் படைப்பாளிகள் அதற்குள் இருக்கிறார்களா? உண்மையில் அங்கு யார் வாழ்கிறார்கள் என்று யாருமே உள்ளே சென்று பார்க்கவில்லையா?”
பண்டைய மனிதர்கள் பதிலளித்தனர்:
> “யாரும் உள்ளே செல்ல முடியாது. நம் படைப்பாளிகள் உள்ளே இருக்கிறார்களா என்று எங்களுக்குத் தெரியாது. உண்மையில் உள்ளே என்ன இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால்... தீர்க்கதரிசன புத்தகத்தில் எழுதப்பட்டபடி, நாம் அனைவரும் முதலில் அங்கிருந்தான் வந்தோம் -.”
சில பேர் எல்லையற்ற லோக வாயில் நுழைய முயன்றனர், ஆனால் அவர்களில் யாராலும் முடியவில்லை.
ஆனால் ஏதியன் அதன் உள்ளே தனது கையை வைத்தபோது, அவர் திடீரென்று அதற்குள் இழுக்கப்பட்டார்.
பின்னால் இருந்து, அனைவரும் கத்தினார்கள்:
> “ஏதியன்! ஏதியன்!”
---
ஏதியன் நிஜ வாழ்க்கை
எதார்த்தத்துக்குள் இறங்கினார்.
அவரது அனைத்து சக்தியும் போய்விட்டது.
அவர் ஒரு மனிதனைப் போலவே உணர்ந்தார்.
அவருக்கு முன்னால் ஒரு அந்நியன் நின்றார்.
ஏதியன் கேட்டார்:
> “நீங்க யாரு? இது என்ன இடம்?”
தெரியாத நபர் பதிலளித்தார்:
என் பெயர் தமிழ்அரசன்
ஏதியன் கேட்டார்.
தமிழ்அரசனா? எதோ பண்டைய மொழிப்பெயர் மாதிரி இருக்கு
அதுக்கு அந்த தமிழ்அரசன் நபரும் சிரித்து கொண்டே:
> “ஆமா நீ சரியா கண்டு பிடிச்சிட்டா அதுமட்டும் இல்லாமா நீ இன்னுரு விஷயத்தையும் கண்டுபிடிச்சிட்டா அதுதான் இந்த உண்மையான உலகம். உங்களைப் போன்ற அனைத்து கற்பனை கதாபாத்திரங்களும் இங்கதான் உருவாகிறது .”
ஏதியன்:
கற்பனை கதாபாத்திரங்களா?”
அந்த தமிழ்அரசன் நபர் தலையசைத்தார்:
> “ஆம்.”
ஏதியன் அதிர்ச்சியடைந்தார்:
> “சரி... நாங்க எல்லாரும் வெறும் கற்பனையா? நான் இழந்தது எல்லாத்தையும் காப்பாத்துனது இது எல்லாமே வெறும் கற்பனையா?”
தமிழ்அரசன் நபர் சிரிச்சிகிட்டே கூறினார்:
> “இல்லை. இது எங்களோட உலகம்—இது எங்களுக்கு உண்மையானது. ஆனால் உங்கள் உலகம் உங்களுக்கு உண்மையானது. நீங்க எங்களோட உலகத்துல உண்மையாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நீங்க இருக்கிற உங்க உலகத்துல நீங்க உண்மையானவங்க.”
ஏதியன் பதிலளித்தார்:
> “நீங்க என்ன சொன்னாலும். நாங்கள் அனைவரும் வெறும் கற்பனைதான். நாங்கள் புனைகதை மூலம் மட்டுமே இருக்கிறோம்… அது ஒருபோதும் மாறாது.”
தமிழ்அரசன் நபர் கூறினார்:
> “கற்பனை என்பது ஒரு மனிதனுக்கு இருக்கும் மிக சக்திவாய்ந்த விஷயம். கற்பனை இல்லாமல், ஒரு நபர் வாழ்க்கையில் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க முடியாது. அது இல்லாமல், எந்த பயனுள்ள கண்டுபிடிப்பும் இருக்க முடியாது. ஓவியம் இருக்காது, எந்த முன்னேற்றமும் இருக்காது கடவுள் கூட - அவர் கற்பனை செய்யவில்லை என்றால் - அவர் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியிருக்க முடிந்திருக்காது”
> “நல்லது அல்லது கெட்டது... எல்லாம் கற்பனை மூலம் பிறந்தது.”
அவர் ஆழ்ந்த மூச்சை எடுத்தார்.
> “கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார். அவர் பிறப்பு, இறப்பு மற்றும் அனைத்து உயிரினங்களையும் படைத்தார். தீமையை அழிக்கவும் நீதியை நிலைநாட்டவும் இயேசு பிறந்து இங்கு வந்தார். ஆனால் இறுதியில், அவருக்கு என்ன கிடைத்தது? மரணம். கடைசியா நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்: எவ்வளவு சக்தி வாய்ந்த கடவுளாக இருந்தாலும் சரி - அவர்கள் இந்த உலகத்திற்கு வந்தால், அவர்களின் சக்தி இங்கே ஒன்றுமில்லை. அவர்களின் சக்தி அவர்களின் சொந்த உலகில் மட்டுமே செயல்படுகிறது - இங்கே இல்லை. உங்களைப் போலவே, ஏதியன்."
தமிழ்அரசன் நபர் தொடர்ந்தார்:
> "அப்படி கடவுள்கள் அனைவரும் இங்கே உண்மையிலேயே இருந்திருந்தால், இந்த உலகம் ஏன் இவ்வளவு மோசமான நிலையில் இருந்திருக்க போகுது?"
ஏதியன் பதிலளித்தார்:
> "ம்ம்... அப்படியானால் நாங்கள் அனைவரும் உங்களால் படைக்கப்பட்டோமா?"
தமிழ்அரசன் கூறினார்:
> "ஆம். நாங்கள் உங்களைப் படைத்தோம். நீங்கள் இந்த உலகில் உண்மையானவர்களாக இல்லாமல் இருக்கலாம் - ஆனா நீங்க எல்லாரும் எங்களுடைய இதயத்துக்குள்ள உண்மையாவே உயிர் வாழ்ந்துட்டு தான் இருக்கீங்க "
ஏதியன் கூறினார்:
> "இப்ப புரியுது ஏன் இந்த இடத்துக்கு அவ்வளவு எளிதா யாராலயும் வார முடியல அப்படின்னு"
தமிழ்அரசன் பதிலளித்தார்:
> "சரி இப்போ உங்கள் சொந்த உலகத்துக்கு திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன் போங்க. அங்கே சந்தோசமா இருங்க. உங்கள் கற்பனை உலகத்தைப் பார்த்து நாங்களும் என்னைக்கு சந்தோசமா இருப்போம்."
ஏதியன் அவன் பின் இருக்கும் உலகத்தை பார்த்து, அதன் உள்ளே சென்றார்.
ஆனால் முழுமையாக உள்ளே செல்வதற்கு முன், அவர் கடைசியாக ஒரு கேள்வியைக் கேட்டார்:
ஏதியன்:
> "சரி... அப்படியானால் எங்கள் படைப்பாளர் யார்?"
அந்த தமிழ்அரசன் அமைதியாகச் சிரித்தபடி கூறினார்:
> "அது நான்தான், ஏதியன். நீங்கள்... நீங்கள் அனைவரும்... கற்பனைக் காவலர்கள். அது மட்டுமல்ல - நீ மட்டும் தான் அவர்களை சரியான பாதையில் வழிநடத்த முடியும். அதை உன்னால மட்டும் தான் செய்ய முடியும்"
---
பிறகு
ஏதியன் வெளிப்புற வெற்றிடம் 1க்குத் திரும்பினான்.
அனைத்து பண்டைய மனிதர்களும் அவரிடம் கேட்டார்கள்:
> "அந்த உலகத்திற்குள் நீங்கள் என்ன பார்த்தீர்கள்?"
ஏதியன் கூறினார்:
> "நம்ம படைப்பாளரைப் பார்த்தேன்."
இதைக் கேட்டதும், அவர்கள் அனைவரும் மெதுவாக மண்டியிட்டு ஏதியனை வணங்கினர் - ஏனென்றால் அந்த உலகிற்குள் யாருமே இதனால் வரை நுழைந்து படைப்பாளரை யாரும் பார்த்ததில்லை... ஆனால் ஏதியன் பார்த்திருக்கிறார்.
இதனுடன் இந்த கதையும்
முடிவுக்கு வருகின்றது
Meanwhile
தமிழ்அரசன்:
இதுக்கப்புறம் நானும் கதை எழுதுவனா இல்ல எழுதாம போவனான்னு எனக்கு தெரியாது அது நீங்க குடுக்குற supportலதான்
இருக்கு ஆனா நான் எழுதின இந்த கதை மூலமா Aethion நம்மளுக்கு சொல்ல வருவது என்னன்னா.
எப்ப நீங்க எல்லா பாதையும் கடந்து எல்லாத்தையும் எழுந்து நீங்க தோத்துட்டேனு நினைக்கிறீர்களோ அப்பதான் ஜெயிப்பீங்க அப்ப அந்தப் பாதையும் புதுசா இருக்கும் நீங்க இழந்ததுக்கு எல்லாமே ஒரு அர்த்தமாவு இருக்கும்
எனக்கு நம்பிக்கை இருக்கு நான் தோக்க மாட்டேன்னு. நான் மட்டுமல்ல நீங்க எல்லாரும் தான் .
One day, we will win in our lives. That will be our greatest achievement.
Thank you for reading my story.
Bye👋🏻👋🏻