ஒரு சிறிய நன்றியும் அர்ப்பணிப்பும் Disclaimer in Tamil Love Stories by Ramakrishnan Anantha books and stories PDF | ஒரு சிறிய நன்றியும் அர்ப்பணிப்பும் Disclaimer

Featured Books
Categories
Share

ஒரு சிறிய நன்றியும் அர்ப்பணிப்பும் Disclaimer

நினைவுகளின் தொடர்கதை: ஒரு பேரன்பின் காவியம்
​(கடலைத் தேடும் நதி)

​பொறுப்புத் துறப்பு (Disclaimer)

இதில் வரும் உறவுகளும் உணர்வுகளும் உண்மை; கதையின் ஓட்டத்திற்காகச் சில பெயர்களும் சம்பவங்களும் மட்டும் மாற்றப்பட்டுள்ளன.

​எந்த மனிதனும் முழுமையானவன் அல்ல. அரவிந்தும் இல்லை; மீராவும் இல்லை. அவர்களின் திருமணமும் Perfect அல்ல. ஆனால் அந்த Imperfect வாழ்க்கைக்குள் இருந்த அன்பு உண்மையானது.
​இந்தக் கதை ஒரு மனிதனை Perfect hero-ஆக உருவாக்குவதற்காக எழுதப்படவில்லை. ஒரு மனிதன் நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு ஆழமாக வாழ முடியும் என்பதைச் சொல்வதற்காக எழுதப்பட்டது.

​அரவிந்த் என் வாழ்க்கையில் இருந்த மனிதர். அவர் என்னை நேசித்தார்; அவரது சுவாசமும் நேசமும் என்னை நிரப்பியது. அந்த மூச்சுக்காற்று இன்றும் என்னைத் தொட்டுக்கொண்டே இருக்கிறது. 

என்னைப் பாதுகாத்தார்; என்னை வழிநடத்தினார். அதே நேரத்தில், ஒருநாள் நான் அவரில்லாமல் உலகத்தில் நிமிர்ந்து நிற்க வேண்டியிருக்கும் என்பதை அறியாமலேயே, அதற்காக என்னைத் தயார்படுத்தினார்.

​அதற்காக, இந்தக் கதையின் முடிவிலும் அவருக்கு நான் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று:
​நன்றி, அரவிந்த். ​நீங்கள் இருந்தபோதும் என்னை வழிநடத்தினீர்கள். நீங்கள் இல்லாதபோதும் என்னை வழிநடத்திக்கொண்டிருக்கிறீர்கள்.


​இது அரவிந்தின் கதை மட்டும் அல்ல… அவரால் உருவான மீராவின் கதையும்கூட!
​அரவிந்த்… நாம் சேர்ந்து இருந்தபோது நான் உங்களை ஏதாவது ஒரு விதத்தில் மனசு வருத்தப்படுத்தும் படி நடந்திருந்தாலோ, சரியாகக் கவனிக்காமல் விட்டிருந்தாலோ, அல்லது கோபத்தில் ஏதாவது பேசியிருந்தாலோ… தயவுசெய்து என்னை மன்னியுங்கள் அரவிந்த்.

​Please forgive me and I am truly sorry!
​— மீரா

Special mention & thanks


​Hi, I am Meera.


​இந்தக் கதையை எழுதும் முன், என் மனதின் ஆழத்திலிருந்து ஒரு சிறிய நன்றி சொல்ல வேண்டும்.
​என் வாழ்க்கையில் வந்த மனிதர்களில் சிலர் என்னைத் தொட்டுச் சென்றார்கள். சிலர் என்னை மாற்றிச் சென்றார்கள். ஆனால் ஒரே ஒருவர் மட்டுமே நான் யார் என்பதையே மெதுவாக உருவாக்கிச் சென்றார். அவர் அரவிந்த்.
​நான் இந்த உலகத்தைப் பற்றி அதிகம் தெரியாமல் வளர்ந்த பெண். வங்கிக்குச் செல்வது முதல் பணத்தைக் கையாள்வது வரை அனைத்தையும் என் அப்பா பார்த்துக்கொண்டார். அது ஒரு பாதுகாப்பு மிக்க வாழ்க்கை. உலகம் பெரியது என்று தெரியும்; ஆனால் அந்த உலகத்தை நேருக்கு நேர் சந்தித்து நடக்க வேண்டிய அவசியம் எனக்கு அப்போது ஏற்படவில்லை.
​அரவிந்த் வந்தபோது, நான் அவருடன் வாழ்க்கையைத் தொடங்கும்போது, “நான் பாதுகாப்பாக இருப்பேன்” என்ற ஒரு அமைதி என் உள்ளத்தில் உருவானது. அவர் ஏற்கனவே தன் குடும்பத்திற்காகப் பெரிய தியாகங்களைச் செய்திருந்தார். மிக இளம் வயதிலேயே வேலைக்குச் சென்று, நீண்ட நேரம் உழைத்து, பணம் சம்பாதித்து, தன் குடும்பத்திற்கு ஒரு நிலையான இருப்பிடத்தை அமைத்துக் கொடுத்தார். அவர் என் வாழ்க்கையில் நுழைந்தபோது, அவரிடம் Financial independence இருந்தது.
​அவர் என் கையைப் பிடித்து ஒவ்வொன்றையும் கற்றுக்கொடுக்கவில்லை. பல சமயங்களில் என்னை முன்னால் நிறுத்திவிட்டு, “நீயே செய்” என்று விட்டுவிடுவார். அப்போது எனக்குக் கோபம் வரும். ஆனால் காலப்போக்கில் புரிந்தது… அவர் என்னைத் தனியாக விட்டுவிடவில்லை; மாறாக, உலகத்தில் நான் தனியாக நிமிர்ந்து நிற்கும் வலிமையைக் கற்றுக்கொடுத்தார் என்று.
​இன்று நான் தனியாக உலகத்தை வலம் வருகிறேன். Independently பயணங்களைத் திட்டமிட்டுச் செய்கிறேன். நிதி நிர்வாகத்தை நானே பார்த்து கொள்கிறேன். பல மொழிகளைக் கற்றுக்கொள்கிறேன். தனிமையிலும் அஞ்சாமல் நிமிர்ந்து நிற்க முயல்கிறேன்.
​பாரதியார் சொன்ன அந்த வரிகள் போல — "நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையும்…" ஆனால் அந்த நிமிர்வுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான சக்தி அரவிந்தின் அன்பு.
​அவர் உயிருடன் இருந்தபோது என்னை வழிநடத்தினார். இன்று அவர் இல்லாதபோதும், வேறு ஒரு வடிவத்தில் என்னை வழிநடத்திக்கொண்டிருக்கிறார். அவர் அளித்த அன்பு, ஆசீர்வாதம், நம்பிக்கை — அனைத்தும் இன்னும் என்னோடு இருக்கின்றன.
​"He was far more than a provider of life's essentials. What he really gave me was a foundation of safety, unwavering stability, and the quiet comfort of knowing I was always protected.”
​அதைவிட முக்கியமாக, நான் யார் என்பதை உருவாக்கினார். He didn't just shape who I am; he truly sculpted me to face any situation in life with strength and grace.
​ஆயிரம் மனிதர்கள் வந்தாலும், அரவிந்தின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அதனால்தான் நான் இன்னும் காத்திருக்கிறேன். ஒருநாள் இந்த நதி கடலோடு கலக்கும் நாள் வரும். அந்த நாள் வரும்போது, அஞ்சாமல் அந்தச் சிறிய ஓடத்தில் ஏறி, உங்களிடம் வந்து சேர்வேன்.
​நீங்கள் இல்லாமல் நான் இல்லை.
நான் இன்று வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்களுடையது.
நான் என்றென்றும் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.
​இன்று அவர் இல்லாதபோதும், அவர் கற்றுக்கொடுத்த விதத்திலேயே நான் என்னை வழிநடத்திக்கொள்கிறேன். இந்தக் கதை அவருக்கான என் நினைவாஞ்சலி; அதே நேரத்தில், அவரால் உருவான என் கதையும்கூட.
​Aravind, I still love you and you will be loved forever.
​— மீரா 🥰❤️
Shiplife A Floating Home.


​கதைக்குள் செல்வதற்கு முன், கடற்பயண வாழ்க்கையைப் பற்றிச் சிறிது புரிந்துகொள்வது அவசியம்.


​ஒரு Ship என்பது வெறும் ஒரு பெரிய படகு அல்ல. அது ஒரு Floating Workplace; ஒரு Floating Home. மாதக்கணக்கில் அதுதான் அதில் பயணிப்பவர்களின் உலகம்.


​பொதுவாகக் கப்பல்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்:


​Passenger ships: மனிதர்களை அழைத்துச் செல்லும்


​Bulk carriers: நிலக்கரி, தானியங்கள் போன்றவற்றை அள்ளிச் செல்லும்


​Container ships: உலகப் பொருட்களைப் பெட்டிகளில் சுமந்து செல்லும்


​Tankers: எண்ணெய் மற்றும் திரவப் பொருட்களைக் கொண்டு செல்லும்


​கப்பலில் Captain (Master) தான் முழு அதிகாரி. அவருக்குத் துணையாக Deck Officers மாலுமிப் பணிகளையும் Safety-யையும் கவனிப்பார்கள். Chief Engineer தலைமையில் பொறியாளர்கள் Engine Room-ஐ இயக்குவார்கள்.
​வெளியிலிருந்து பார்த்தால் Foreign countries, Dollar salary என இது ஒரு Adventure life போலத் தெரியலாம். ஆனால் அதன் மறுபக்கம் ஆறு முதல் எட்டு மாதங்கள் குடும்பத்தைப் பிரிந்து வாழும் தியாகம் நிறைந்தது.


​நான் அந்த வாழ்க்கையை நிறையவே பார்த்திருக்கிறேன்; வாழ்ந்திருக்கிறேன். அதனால் அந்த அனுபவங்களின் ஆழம் எனக்கு நன்றாகவே தெரியும். என் கதையும் இந்த மிதக்கும் உலகத்தைச் சுற்றித்தான் நகரப்போகிறது.


​வாழ்க்கை / திருமணம் என்பதும் ஒரு கப்பல் பயணம் போன்றதுதான்.
ஒரு கப்பல். அதன் Captain. அவருக்குத் தோள் கொடுக்கும் Chief Officer (First Mate).
ஒரே கடல்… சில நேரம் அமைதி, சில நேரம் புயல்! இருவரில் யாரும் சூப்பர் ஹீரோவும் இல்லை, பாதிக்கப்பட்ட விக்டிமும் இல்லை. பரஸ்பர புரிதலோடு (Mutual Understanding) இருவரும் சேர்ந்து அந்த வாழ்க்கைக் கப்பலைப் பாதுகாப்பாகச் செலுத்தி முடிப்பதே இலக்கு!


​Preface


முன்னுரை: கடலும் நதியும்


​Hi, I am Meera. இது என்னுடைய கதை!
​எனக்கு ஏனோ இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். என் வாழ்வோடு பின்னிப்பிணைந்த அந்தப் பாடல் வரிகள்:


​"அமைதியான நதியினிலே ஓடம்…
அளவில்லாத வெள்ளம் வந்தால் வாடும்…
காற்றினிலும் மழையிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்…”


​அமைதியாய் ஓடிக்கொண்டிருந்த நதி போன்ற என் வாழ்க்கையில், ஒரு சிறிய ஓடமாகத்தான் என் பயணம் தொடங்கியது. எதிர்பாராமல் வந்த மழையினிலும், புயலினிலும், இடியினிலும் கரையில் ஒதுங்காமல் என் ஓடத்தைச் சுழன்றடித்தன.


​ஆனால் இது ஒரு சோகக் கதையல்ல. புயல் வந்ததால் வாழ்க்கை முடிந்துவிட்ட பெண்ணின் கதையுமல்ல. கரையில் ஒதுங்காமல், தன் இலக்கான கடலை நோக்கித் தொடர்ந்து பயணிக்கிற ஒரு நதியின் கதை. காதலைத் தாண்டிய பேரன்பின் காவியம்!


​உறவுகள் தொடர்கதை; உணர்வுகள் சிறுகதை. ஒரு கதை முடிந்தாலும், அதன் உணர்வுகள் முடிந்துவிடுவதில்லை. சில நினைவுகள் நம்மோடு தொடர்ந்து வருகின்றன.


​என் கண்ணன் ஒரு கற்பனைக் கதாபாத்திரம் அல்ல; என் வாழ்க்கையில் வந்த அரவிந்த்! ‘அரவிந்த்’ என்ற பெயருக்கே ‘கண்ணன்’ என்றுதான் பொருள். அதனாலோ என்னவோ, நான் காத்துக்கொண்டிருந்த என் மனிதருக்கு அந்தப் பெயர் அமைந்தது.


​யார் என்ன சொன்னாலும் ,கேட்டாலும், உலகம் என்ன பேசினாலும், கடைசி வரை எங்களுக்குள் இருந்த ஒன்று — ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும், துரோகமே இல்லாத அந்தத் தூய்மையான வாழ்க்கையும்தான்!


​அந்த நம்பிக்கைக்கு ஒரு சான்றாகவே என் வாழ்க்கை இருந்தது. அவர் ஊரில் இருக்கும் நாட்களில், என் சிறுவயதுத் தோழர்களோ அல்லது நாங்கள் தெருவில் ஒன்றாக விளையாடி வளர்ந்த ஆண்-பெண் நண்பர்களோ எங்களைப் பார்க்க வந்தால்கூட, அவர் அவர்களை மிகவும் இன்முகத்தோடும் மரியாதையோடும் வரவேற்பார். “மீரா… அவங்களுக்கு காபி, டீ என்ன வேணுமோ பார்த்துக்கொடு” என்று சொல்லிவிட்டு, சில நிமிடங்கள் அவர்களிடம் கனிவாகப் பேசிவிட்டு, “சரி, நீங்க பேசிட்டு இருங்க” என்று சொல்லி நகர்ந்துவிடுவார். தன் மனைவி மீது, அவளது நட்பின் மீதும் அவர் வைத்திருந்த அந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் கண்ணியமும்தான் எங்கள் உறவின் மாபெரும் தூண்!