Chithi Please- 1 books and stories free download online pdf in Tamil

சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. Part 1

சித்தி ப்ளீஸ் Part 1

இது உங்கள் சிவா.. 

 

நான் சிவா காலேஜ் 4 th இயர் Engineering கோவை. என்னைப் பற்றின அறிமுகம் இது போதும். வீட்டில் நான், தங்கை மீனா (8 th std ) அம்மா லஷ்மி அப்பா பாலு Builder. கோவை சிட்டி யில் தனி சொந்த மாடி வீடு. என் சித்தி (அம்மாவின் ஒரே தங்கை) மாலினி தான் மெயின் கேரக்டர். எனக்கும் சித்தி க்கும் பெரிய வயது வித்தியாசம் கிடையாது. என்னைவிட ஜஸ்ட் 4, 5 வயது தான் பெரியவள். என் பாட்டிக்கு லேட் ஆக conceive ஆனவள். கோவையில் பிஎஸ்ஸி அக்ரி, சில கம்யூட்டர் கோர்ஸ் பண்ணி விட்டு இப்போ வீட்டில் பண்ணையில் உதவி யாக இருக்கிறாள். சிறு வயதிலிருந்தே நானும் என் தங்கையும் பொள்ளாச்சி பக்கம் கிராமத்து பாட்டி வீட்டிற்கு போனால் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக விளையாடுவோம். பெரிய வயசு வித்தியாசம் இல்லாததால் சித்தி யை நான் எப்பவும் நீ, வா, போ னு தான் கூப்பிடுவேன். சில சமயங்களில் மாலினி னு பேர் சொல்லி கூப்பிட்டு வம்பிழுப்பேன். பாட்டி வீடு பழங்காலத்து பெரிய மாடி வீடு, தோட்டம், துரவு பண்ணை,மாடுகள், வேலை ஆட்கள், கார்கள். வீட்டு முன் குறைந்தது 3 டிராக்டர்களாவது எப்பவும் நின்றுகொண்டு இருக்கும். வீட்டில் சித்தி தான் லீடர், அவள் சொன்னதுதான் சட்டம். ரொம்ப நாள் கழித்து,

 காலேஜ் ஜாயின் ஆகி ஒரு தடவை பாட்டி வீட்டிற்கு நானும் மீனாவும் போனபோது சித்தி யை பார்த்த போது பிரமித்து போனேன். ஐந்து வருடங்கள் முன்பு பார்த சித்தியா இது. மைகாட் இவ்ளோ அழகா என் சித்தி? என் காலேஜ் பொண்ணுங்க ல்லாம் சித்தி கால் தூசி க்கு பெற மாட்டார்கள். அப்பப்பா என்ன ஒரு அழகு, நளினம், Height மடிப்பு, ரோஸ் கலர். அசப்பில் அப்படியே நடிகை கயல் ஆனந்தி போல, ஆனால் சித்தி கொஞ்சம் உயரம் அதிகம். அந்த கீழ் உதட்டு மச்சம் அச்சு அசலாய் நடிகை ஆனந்தி தான். தேவதை போல் இருந்தாள். பார்த்துகிட்டே இருக்கலாம் போல தோன்றியது. அடிக்கடி பார்த்து கிட்டு இருந்தேன்.

 

என்னடா இஞ்சினியர் சிவா, புதுசா பார்க்கிற மாதிரி பார்த்து கிட்டு இருக்க? அதுக்கு தான் அப்பப்ப பாட்டி வீட்டிற்கு வந்து எங்களை யெல்லாம் பார்த்திட்டு போயிட்டிருக்கனும். எங்க நீங்க இந்த பக்கம் வர்ரதே கம்மி ஆயிட்டே. அதான் எங்களை யெல்லாம் மறந்துட்டீங்க ஆனா, காலேஜ் சேர்ந்து ஒரு மார்க்கமா தான் இருக்க. என்ன கேர்ள் ஃபிரண்ட் லாம் செட் ஆயிடுச்சா? னு சிரித்து கொண்டே சித்தி கேட்ட போது தடுமாறி போய்விட்டேன்.

 

நாக்கு குழற அது வந்து இல்ல சித்தி என்ற போது சிரித்து கொண்டே

 

அதுசரி, அதுக்கெல்லாம் எங்க உனக்கு அவ்வளவு தைரியம்? என்று சொல்லி விட்டு கிட்ட வந்து என் தலையை கோதி விட்டு சென்றாள் .

 தென்றல் வந்து என்னை தழுவி விட்டு சென்றது போல் இருந்தது. 

 

அப்ப விழுந்தது தான். சித்தி யை லவ் பண்ண வேண்டும். ப்ரபோஸ் பண்ண வேண்டும். அவளை கல்யாணம் பண்ணி கொள்ள வேண்டும். அட்லீஸ்ட் கேர்ள் ஃப்ரண்ட் ஆக வைத்து கொள்ள வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டேன்.

ஆனால் மனதில் பயம். சித்தி யை பற்றி ஏற்கனவே தெரியும். பிடிவாதம் அதிகம், கொஞ்சம் திமிரும் கூட. சொன்னால் சொன்னதுதான். அப்பறம் யார் பேச்சையும் கேட்க மாட்டாள். இறங்கி யும் வரமாட்டாள். 

இதை எப்படி செய்வது, எங்கு ஆரம்பிப்பது? என்று மனம் அலை பாய்ந்தது. இன்னும் கோவை போக 5 நாட்கள் தான். அதற்குள் நல்ல படியாக முடிய வேண்டும். கடவுளே, மீனா ஹெல்ப் மூலமாக எதாவது செய்ய லாமா?

யோசிக்க யோசிக்க மண்டை வெடித்தது.

அடுத்த நாள் தானாகவே சந்தர்ப்பம் அமைந்தது. சாயந்திரம் பண்ணை வயலுக்கு நான் மீனா, மாலினி சித்தி போனோம். ஏதேதோ மூட்டைகளை ஆட்களுக்கு சொல்லி எடுத்துக் கொண்டு போக வேண்டுமாம். எத்தனை? என்னென்ன? கணக்கு பார்க்கணும் போல, என்னோட பிரச்சினை யில் இது வேற. எரிச்சலுடன் ஷார்ட்ஸ் சர்ட் டுடன் பண்ணைக்கு கிளம்பினேன். என்ன ஒன்று சித்தி கூட இருக்கிறாள். அது போதும். ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்காமலா போகும். ஆனால் இங்கே இத்தனை ஆட்கள் மத்தியில் பார்ப்போம். சித்தி கூட தனியா பேசுவதே கஷ்டம். இதுல எங்க? ஆனா, பாசிட்டிவா திங்க் பண்ணணும்னு நானே எனக்கு சமாதானம் பண்ணிக்கிட்டேன். கூடுமானவரை சித்தி பக்கத்திலேயே இருக்கிற மாதிரி பார்த்து கொண்டேன். தூரத்தில் தென்னந் தோப்பில் மீனா வும் மற்ற பண்ணை பெண்களுடன் வேலை செய்து கொண்டே வாயடித்து கொண்டிருந்தாள். 

சித்தி யும் எல்லா கணக்கையும் முடித்து விட்டு ஆட்கள் எல்லோரையும் வெளியே வேலை கொடுத்து அனுப்பி விட்டு, டேபிளில் லேப்டாப் பில் ஏதோ வெரிஃப்பை பண்ணி கொண்டே சிவா, பக்கத்து ஸ்டோர் ரூம் மர பீரோ ல இன்னொரு பழைய சிட்டா புக் ரெட் அட்டை போட்டது இருக்கு எடுத்துட்டு வா ரூம் கீ கதவு மேலே யே இருக்கும் பாரு என்றாள். 

எல்லா ஆட்களும் தூரத்தில் மூட்டைகளை அடுக்கி கொண்டிருந்தனர். சீக்கிரம் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு போகலாம் என்ற அவசரத்தில்.

சூரியன் மெதுவாக மறையும் நேரம் .

சித்தி சொன்ன வுடன் பக்கத்து ஸ்டோர் ரூம் கதவை திறந்து லைட் ஆன் பண்ணி பார்த்தால், குண்டு பல்ப் வெளிச்சம் பத்தலை. என் மண்டைக்குள் லைட் எரிந்தது. இதுதான் சரியான இடம். சின்ன ரூம். அவ்வளவா வெளிச்சம் இல்லை. ஆட்களும், மீனாவும் தூரத்தில். ரூமில் ல் நிறைய மூட்டைகள், டின் கள். பீரோ வில் மேலே உள்ளே நிறைய புக்ஸ், ரசீதுகள், பணம் இன்னும் என்னென்னவோ இத்தியாதிகள். சரியான இடம். வாய்ப்பை நழுவ விடக்கூடாது. முடிவு பண்ணினேன். மர பீரோ வை சாய வைக்கணும்,

புக்ஸ் மூட்டைகள் கீழே விழ வேண்டும். சித்தி அவசரத்தில் வந்து என் மேல் விழ வேண்டும். அப்பறம் நிலைமைக்கேற்ப காரியத்தை நடத்த வேண்டிய து தான். மனம் பட பட வென்று அடித்துக்கொண்டது. டின் லிருந்து ஏதோ ஒரு ஆயிலை கதவு உள்ள வாசலில் ஊற்றினேன்.

என்னடா புக் கிடைச்சதா? நான் வேணா வந்து பார்க்கட்டுமா?

சித்தி யின் குரல்.

வேணாம் சித்தி, கிடைச்சிடுச்சு. கொஞ்சம் டஸ்ட் ஆ இருக்கு. வெளிச்சம் வேற பத்தலை. அதான்

 

கொஞ்சம் டஸ்ட் ஆ? நிறையவே இருக்கும். பார்த்து

ஒரு நாள் அந்த ரூமை ஒழிக்கணும் . 

சரி பாத்து எடுத்துட்டு வா.

சித்தி யிட ம் பேசும் போதே எல்லா வற்றையும் செட் பண்ணி விட்டேன்.

மர பீரோ வை மூட்டை மேல் லைட்டாக தள்ளி விட்டு ஸ் ஆ வென்று மெதுவாக சித்தி க்கு மட்டும் கேட்குற மாதிரி கத்தினேன். தூரத்தில் யாருக்கும் கேட்காமலிருக்கும் பொருட்டு. திட்டப்படி புக்ஸ், டின் கள் சரிந்து விழுந்தன. பொருள்கள் விழுந்த சப்தம், என்னுடைய சின்ன அலறல் கேட்ட

சித்தி, சிவா என்னாச்சு? என்று பர பரப்புடன் உள்ளே வந்து ஆயிலில் கால் வைக்க அப்படியே வழுக்கி என் மேல் சாய்ந்தாள். அதை எதிர்பார்த்து சித்தி யை மார்போடு சேர்த்து அணைத்து என் நெஞ்சில் வாங்கி கீழே மூட்டையின் மேல் வாகாக விழும் சந்தர்ப்பத்தில் என் உதட்டின் மீது சித்தி யின் மாதுளை உதடுகள் அழுத்தமாக பதிந்தன. இருவருக்கும் இது புது அனுபவம். உடம்பெல்லாம் மின்சாரம் தாக்கியது போல இருந்தது. நானும் பரவசத்தில் கண்ணை மூடி ரசித்திருந்தேன். சித்தி யின் உடல் அதிர்வு என் மீது பரவியது. கிடைத்த சான்ஸை விடவில்லை. நான் அப்படியே லிப் லாக் கில் இருந்தேன். மெதுவாக கண் திறந்து பார்த்தேன். சித்தி கண்களை மூடிய படி என் மீது கிடந்தாள். அவள் இந்த உலகத்தில் இல்லை என்பது மட்டும் புரிந்தது. 

அப்போது பக்கத்தில் இருந்த டின் ஒன்று கீழே விழுந்து சப்தமிட, இருவரும் அதிர்ந்தோம். சித்தி க்கு நிலைமை புரிய சில செகண்ட் ஆனது. புரிந்து கொண்டு அவசரமாக எழுந்திரிக்க. என்னை தள்ளிவிட்டு, வாயைத் துடைத்துக் கொண்டு எழுந்திரிக்க முயல தடுமாறி மறுபடியும் என் மேல் விழ, நான் மறுபடியும் என் மேல் சாய்த்து, அவள் காதில் ஐ லவ் யூ சித்தி என்றேன். 

விடுடா சிவா என்ன இது? நானும் ஒரு நிமிஷம் மயங்கிட்டேன். என்ன பண்றேன்னு எனக்கே தெரியவில்லை. ச்சீ ச்சீ என்ன அசிங்கம் இது? என்று சேலையை சரி செய்து கொண்டே, என் கண்ணை பார்க்க முடியாமல், இது தப்பு சிவா வா வெளியே போவோம். ச்சே நானே ஒரு நிமிஷத்துல தப்பு பண்ண பார்த்தேன், என்று கிளம்ப, நான் சித்தி யின் கையை பிடித்து சித்தி ஐ லவ் யூ என்னை விட்டு போகாதே, நான் உண்மையிலேயே உன் னை லவ் பண்றேன். சத்தியம். நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று என் பக்கம் இழுக்க, முட்டாள் மாதிரி பேசாதே சிவா, நம்ப என்ன உறவு னு தெரிஞ்சு தான் பேசுறியா? ஏதோ இப்ப நடந்த து நடந்து போச்சு ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு. ஏதோ ஒரு சபலத்தில பண்ணிட்டோம். மறந்துட்டு வோம். முதல்ல வெளியே போவோம் வா.

 

என்னாச்சு எனக்கு நல்ல வேளை பெரிய தப்பு ஏதும் பண்ணலை என்று தன்னை தானே திட்டி கொண்டே ரூமில் உள்ள சாமான்களை அடுக்கி வைக்க ஆரம்பித்தாள்.

எனக்கு ஒண்ணும் புரியவில்லை. முன்பிருந்ததை விட இப்போது இன்னும் சித்தி மேல் காதல், ஆசை தீவிரமாயிருந்தது. என்ன ஆனாலும் சரி எனக்கு சித்தி வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தேன். எப்படியாவது சித்தி யை கன்வின்ஸ் பண்ணி என் லவ் உண்மை யானது என்று புரிய வைக்க வேண்டும் . இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் அமைவது அரிது. மறுபடியும் அமையுமோ? அமையாதோ? தெரியாது. 

சித்தி க்கு ஹெல்ப் பண்ற மாதிரி யே பண்ணி கொண்டு சித்தியின் இரண்டு கைகளையும் பிடித்து கொண்டு சித்தி, நான் உண்மையிலேயே உன் னை லவ் பண்றேன் என் லவ் சத்தியமானது. ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோ. நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது.

நீ தான் என் உயிர் னு சொல்லி கொண்டே அவள் கையில் முத்தமிட்டேன். வெடுக் கென்று கையை இழுத்துக் கொண்டு, என் கண்ணை நேராக பார்த்து, சிவா போதும் ஒண்ணும் பேச வேண்டாம். நீ ஹெல்ப் பண்ண வேண்டாம். நான் பார்த்துக்கிறேன். என் மேலயும் தப்பு இருக்கிறதுனாலதான் நான் பொறுமையா உன் கிட்ட பேசிட்டு இருக்கேன். நீ முதல்ல ரூமை விட்டு வெளியே போ என்றாள்.

 

எனக்கு அழுகையாக வந்தது. இந்த சமயத்தில் எதுவும் பேசக்கூடாது. எது பேசினாலும் தப்பாகத்தான் போய் முடியும். மனதை கல்லாக்கி கொண்டு மெதுவாக வெளியேறினேன். குடிகூரா பௌடர் வாசம் தொடர்ந்து வந்தது.

பண்ணைலிருந்து எப்படி பாட்டி வீட்டிற்கு வந்தோம்னு தெரிய வில்லை. வழி நெடுக மீனா ஏதேதோ பேசிக் கொண்டு வந்தாள். எனக்கு ஒண்ணும் மண்டையில் ஏறவில்லை. சித்தி யின் நினைப்பாகவே இருந்தது. ஏதாவது தப்பு பண்ணி விட்டோமா என்று மனசு அலைபாயும் போது இல்லை இல்லை. தப்பு எதுவும் பண்ண வில்லை என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன். ஆனால் மனது வலித்தது.

 

சித்தி எதுவும் நடக்காதது போல் பண்ணை ஆட்களுடன் எங்கள் முன்னாடி நடந்து கொண்டிருந்தாள். என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நார்மலாக நானும் மீனாவும் இருந்தால், சித்தி எங்கள் கூடத்தான் டைம் பாஸ் பண்ணுவாள். எப்பவும் கூடவே இருப்பாள். ஆனால் இன்று.

 

வீடு வந்தவுடன் மாடி யில் உள்ள அவரவர் ரூமுக்கு போய் விட்டோம். நான் போய் கட்டிலில் குப்புற படுத்து விட்டேன். மீனா வந்து அண்ணா அண்ணா என்று எழுப்பும் வரை.

 

அண்ணா, பாட்டி கீழே சாப்பிட வரச் சொன்னாங்க, சீக்கிரம் வா என்றாள். எனக்கு இருந்த நிலைமைக்கு என்னை தனியா விட்டால் போதும் என்றிருந்தது. சாப்பிட வும் பிடிக்கவில்லை. ஆனால் சித்தி யை பார்க்க னும் போல் இருந்தது. 

 

மீனா நீ கீழே போ, எனக்கு சாப்பிட பிடிக்கலை என்றேன்.

 

கொஞ்ச நேரத்தில் பாட்டி யின் சத்தம் கீழேயிருந்து,

 

கண்ணூ சிவா, வாப்பா சாப்பிட என்று.

சரி, இனி விடமாட்டார்கள் என்று கீழே போய் பாட்டி எனக்கு ஒண்ணும் வேணாம் பசி யில்லை என்று சேரில் அமர்ந்தேன்.

 

இங்கேயிருந்து பார்க்கையில் கிச்சன் உள்ளே சித்தி யின் பாதி பின் புறம் தெரிந்தது. ஃப்ரஷ் ஆகி ஒயிட் கலர் சுடிதார் அணிந்திருந்தாள். 

மீனா, டேபிளில் அமர்ந்து சப்பாத்தி சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

 

சித்தி வந்து மீனாவிற்கு ஒரு சப்பாத்தி வைக்க வர,

 

பாட்டி, என்னாடி அதிசயமா இருக்கு,

மாலினி, நீயும் பசிக்கலை சாப்பாடு வேணாங்குற. சிவாவும் வேணாங்குறான். பண்ணை யில் ஏதாவது சாப்பிடிங்களா? இல்ல ஏதாவது பிரச்சனையா? டேய் சிவா, உன் சித்தி ஏதாவது சொன்னாளா?. சண்டை யா என்ன? மீனா உனக்கு ஏதாவது தெரியுமா? என்று பட பட வென்று கேட்க.

 

நான் மெதுவாக நிமிர்ந்து சித்தி யை பார்த்தேன். அதே சமயம் அவளும் என்னை பார்க்க, இருவர் கண்களும் சந்தித்தன. என்னை பார்த்து கொண்டே.

 

அம்மா, ஏதாவது வாய்க்கு வந்த படி உளராதே. ஜஸ்ட் பசிக்கலை ன்னேன். உனக்கு என்ன நான் சாப்பிட னும் தானே? இதோ சாப்பிட றேன். சும்மா படுத்தாதே. என்று சொல்லி யபடி சாப்பிட ஆரம்பித்தாள்.

பாட்டி, அதுசரி, நான் எது சொன்னாலும் என்னயே திட்டு அப்படியே ரெண்டு சப்பாத்தி தட்டுல போட்டு சிவா க்கும் வை. நாட்டு கோழி குழம்பு ஊத்து என்றாள்.

சித்தி எடுத்து வைத்து தட்டை என் பக்கம் தள்ள, எனக்கு வேணாம் பசிக்கலை என்றேன்.

பாட்டி, மாலினி புள்ளய சாப்பிட சொல்லுமா என்று சொல்ல.

அம்மா, நீ சும்மா இரு, அதான் பசிக்கலை னு சொல்றான் ல விடேன்.

நீ வேணா ஊட்டி விடு. என்ன ஆள விடு. என்று சொல்லி ய படியே டங் கென்று தான் சாப்பிட்ட தட்டை தூக்கி ய படி கிச்சன் பக்கம் போனாள்.

இப்ப என்னடி சொல்லிட்டேன்? இந்த குதி குதிக்கிற னு சொல்லி ய படியே.

 

சிவா கண்ணு, என்னமா என்ன ஆச்சு என்று என் பக்கம் வந்து உட்கார, எனக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. என் தலை மேல் கை வைத்து ஏங்கண்ணு, அம்மா ஞாபகம் வந்துட்டா? னு கேட்க, பாட்டி மடியில் சாய்ந்து அழுகை யை மறைத்து கொண்டேன்.  

 

எனக்கு இப்போது ஆறுதலாக சாய்ந்து கொள்ள ஒரு தோள் தேவை. பாட்டி யின் பரிவு என்னை நெகிழ வைத்தது.

 

கண்ணு, இன்னும் 4 நாள் தானே மா. பாட்டி, தாத்தா கூட இருந்துட்டு போய்யா.

நான் சரி என்று தலையாட்டினேன் .

இப்ப சாப்பிடு மா.

இல்ல பாட்டி எனக்கு கிளாஸ் மோர் இருந்தா கொடுங்க போதும் என்றேன்.

 

சரிய்யா, அப்படியே படுத்துக்கோ. நான் எடுத்து ட்டு வரச் சொல்றேன் என்று சொல்லி வேலைக்காரி யை கூப்பிட்டு கொண்டு வரச் சொன்னார்.

 

கொஞ்சம் நேரம் கழிச்சு ஜில் னு காத்து அடிக்க அப்படியே பால்கனி பக்கம் போய் நின்றேன். மனசு இறுக்கமாக வே இருந்தது. 

 

பின்னால் யாரோ வரும் சப்தம்.,

சித்தி.

 

சிவா, கொஞ்சம் நேரம் கழிச்சு மொட்டை மாடிக்கு வா உன்கிட்ட பேசனும் தனியா.

 

எனக்கு ஒண்ணும் புரியலை. கிர் னு இருந்தது. என்ன சொல்ல போறாளோ?

போனால்தான் தெரியும்.

 

என் கிட்ட சித்தி பேசுனதே பெரிய விஷயம். பார்ப்போம் கன்வின்ஸ் பண்ணி பார்க்கலாம்.

மனதில் புதிய தெம்புடன் மொட்டை மாடிக்கு போனேன். 

 

ஒரு மூலையில் மாடி கைப்பிடியை பிடித்துக்கொண்டு வெளியே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

 

நிலவு வெளிச்சத்தில் அப்சரஸ் போல இருந்தாள். ஃபுல் ஒயிட் சுடி பார்டர் மட்டும் ப்ரைட் ப்ளூ கலர், துப்பட்டா கழுத்தை சுற்றி காற்றில் பறக்க., காதோர கேசமும் காற்றில் அலைபாய அதை அவ்வப்போது காது மடல் மீது இழுத்து விட்டு கொண்டே. இரவு நிலவு வெளிச்சத்தில் சித்தியை பார்க்கும் போதே ரம்மியமாக. எனக்கு மனசு லேசானது போல் இருந்தது. ஆனால் என்ன சொல்ல போறாளோ? என்ன நடக்குமோ னு நினைக்கையில் மறுபடியும்திகிலானது. 

கிட்ட போனவுடன், என் பக்கம் பார்த்து என் கண்ணை ஸ்ட்ரெய்ட் ஆ பார்த்து 

சாப்பிட்டியா? என்றாள்.

ம்.. ஜஸ்ட் மோர்

ஏன்?

பசிக்கலை.

பசிக்கலையா? இல்ல சாப்பிட பிடிக்கலை யா?.

 

சரி விடு, உன் கிட்ட பர்சனலா பேசனும். அதான் வரச்சொன்னேன்.

யாரும் மேல வர்றதை பார்கலைல?.

மீனா என்ன பண்றா? னு கேட்க.

 

மீனா டிவி பார்த்துக்கிட்டிருக்கா. நான் மேல வந்ததை பார்க்கலை.

 

ஓகே சிவா. நேரிடையாவே விஷயத்துக்கு வரேன்.

இன்னைக்கு நடந்தது ஒரு ஆக்ஸிடென்ட். அதுவும் எதிர்பார்க்காத ஒண்ணு. எனக்கும் குற்ற உணர்ச்சி இருந்தாலும் நான் ரியலைஸ் ஆயிட்டேன். 

ஏதோ நடந்தது நடந்து போச்சு.

ரெண்டு பேரும் மறந்துடலாம்.

இது வெளியே தெரிஞ்சா அசிங்கம் . அதையே நினைச்சு கில்ட்டியா ஃபீல் பண்ணாதே. நானும் பண்ணலை.

 

வெயிட்..வெயிட் சித்தி நான் பேசலாமா?

 

இரு, இன்னும் நான் முடிக்கலை.

சொல்ல வந்ததை சொல்லிடறேன் .

நீ சின்ன பையன். இந்த வயசு அடோலசண்ட் ஏஜ். எதைப் பார்த்தாலும் கவர்ச்சி யாதான் தெரியும்.

இன்னைக்கு நடந்த சிச்சுவேசன் வேற அந்த மாதிரி.. பாரு, நானே என்னய மறந்துட்டேன். என்ன நடந்தது னு புரியாத மயக்க நிலைக்கு போயிட்டேன். எப்படி?, ஏன்? இந்த மாதிரி நடந்துச்சுனு தெரியலை. என்னால நம்ப முடியலை. நானா இப்படி நடந்துகிட்டேன்னு . ஷாக்கிங் ஆ இருக்கு, என்னய நினைச்சா எனக்கே கில்ட்டியா இருக்கு. உனக்கும் அப்படி தான் இருக்கும். 

சோ, என்ன சொல்ல வர்றேன் னா? இதையெல்லாம் விட்டுட்டு படிப்பில் கான்சன்ட்ரேட் பண்ணு. என்னய லவ் பண்றேன், கல்யாணம் அது இது னு வீனா மனசை போட்டு குழப்பிக் காதே. நான் இதுலேயிருந்து வெளியே வந்துட்டேன். நீயும் வரணும் என்று சொல்லி Gap விட.

 

நான் மெதுவாக, சித்தி இப்ப நான் பேசலாமா?.

 

ஷ்யூர், சொல்லும்மா னு கனிவா என்னை ஏறிட்டாள்.

 

சித்தி, ஃபர்ஸ்ட் நான் இதை கில்ட்டியா ஃபீல் பண்ணலை.

சித்தி ஷாக் ஆனது அந்த மெல்லிய நிலா வெளிச்சத்தில் தெரிந்தது.

கண்களை அகல விரித்து என்னை பார்த்தாள்.

 

தூரத்தில் ரயில் போகும் தட தட வென்ற சப்தம்.

சித்தி இதயமும் தடக் தடக் என்று துடிக்க ஆரம்பித்தது.

நான் நல்லா கான்ஃபிடண்ட் டோட,

 

சித்தி உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்படி பிடிக்கும்னா என்னயே எனக்கு பிடிக்கிறதை விட உன்னைய ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

 

சித்தியின் முகம் மாறத் தொடங்கியது.

நீ இதை அடோலசண்ட் இல்ல insane னு எதுவா நினைச்சாலும் பரவாயில்லை. 

 

என் லவ் ஃப்யூர், நான் உன்னை லவ் பண்றது சத்தியம். என் காதலை கொச்சை படுத்தாதே.

 

சிவா என்ன இது, மடத்தனமான பேச்சு. 

 

இரு சித்தி, என்ன முழுசா பேச விடு.

ஏதோ மனம் குழம்பி போய் பேசறேன் னு நினைக்காதே.

 

நீ என் தேவதை சித்தி. உன்னை பார்த்துகிட்டே இருக்கனும் போல இருக்கு. எப்பவும் நீ என் பக்கத்திலேயே இருக்கனும் னு ஆசை படறேன். உன் மனசுல எனக்குன்னு ஒரு சின்ன இடம் இருந்தா போதும். நீ எனக்கு லைஃப் பார்ட்னரா கிடைச்சினா அதுவே போதும். வேற எதுவும் வேண்டாம்.

 

என் லவ் வை புரிஞ்சுக்கோ. நீ இல்லாமல் என்னால இருக்க முடியாது.

அதுவும் இவ்ளோ நடந்ததுக்கப்பறமும். என்னால எதுவும் மறக்க முடியாது. 

 

 நான் அங்க ரூம் ல உன்னய யூஸ் பண்ணிக்கலை, நீ என்னோடவள். அந்த உரிமையில் தான் நாம ரெண்டு பேரும் ஒண்ணா கலந்துட்டோம்.

 

அதுவும் நீ என்னோட தேவதை, உயிர். நான் அப்படித்தான் ஃபீல் பண்ணேன். பண்றேன். என் மடியில அவ்வளவு கிட்டத்தில உன்னை பார்த்த வுடன் நான் என்னயே மறந்துட்டேன். நீ எனக்கானவள். சாதாரண அழகா நீ 

உன் அழகு என்னை புரட்டி போட்டுடுச்சு. அதான் கொஞ்சம் எல்லை மீறிட்டேன்.

 

நான் பேச பேச சித்தி யின் அழகான பெரிய கண்கள் இன்னும் விரித்து கொண்டே போனது.

 

ஆனா, இப்பவும் சொல்றேன் நான் கில்ட்டியா ஃபீல் பண்ணலை. வேற யார்கிட்டேயும் நான் அந்த மாதிரி நடந்துக்கலை, நடந்துக்கவும் மாட்டேன். வேற யாரையும் என்னால் நினச்சு கூட பார்க்க முடியாது. உன்கிட்ட மட்டும் தான். சித்தி அவ்ளோ சந்தோஷமா இருந்தது. அந்த சந்தர்ப்பத்தை எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமா பார்க்குறேன். அந்த நிமிடங்கள் இப்ப வரைக்கும் என் லைஃப் ல இல்லாத உச்ச கட்ட சந்தோஷத்தை எனக்கு கொடுத்தது. அது என் லைஃப் ஃபுல்லா வரனும் னு வேண்டிக்கிறேன். ஐ லவ் யூ சித்தி என்று முடித்து.

 

நான் மௌனமாக.

 

சித்தி, சிவா இப்ப எது சொன்னாலும் உனக்கு புரியாது.

நேரமாச்சு யாராவது வந்துடுவாங்க.

நாளைக்கு இதே டைம் இங்கே வா. மத்ததை பேசலாம். சில விஷயங்களுக்கு டைம் தான் தீர்வுன்னு சொல்ல.

 

எனக்கும் அதுதான் கரக்ட் னு தோன்றியது. 

 

மனதிற்குள், சித்தி கொஞ்சம் டைம் எடுத்து நீ யோசிச்சினா என்னை புரிஞ்சுக்குவ.

 

சிவா சாப்பிடலயா? மோர் மட்டும் போதுமா?.

 

சித்தி நீ சொன்னா கண்டிப்பா சாப்பிட றேன். உன் கிட்ட பேசினதுக்கு அப்பறம் 

மனசு நிறைஞ்சு இருக்கு என்றேன்.

 

உதட்டை சுழித்து புன்முறுவலுடன், நல்லா பேசுறடா.

போக்கிரி, கீழே வா சாப்பாடு வைக்கிறேன் என்று என் தேவதை நடந்து சென்றாள். 

 

மேலே வானத்தில் மறைந்திருந்த நிலவு பூரணமாக வெளியே வந்தது.. வீசும் காற்று குளிர்ச்சியாக இருந்தது.. மனதும் கூட

அடுத்த நாள் பேசலாம் என்று முடிவு பண்ணியிருந்தோமே தவிர, தனிமையில் சந்திக்க சந்தர்ப்பமே அமையவில்லை.

தாத்தா வின் உறவுக்காரர்கள் கொஞ்சம் பேர் வீட்டில் வந்து டோரா போட வீடு அமளி துமளி பட்டது. எனக்கு தான் எரிச்சல். என்ன ஒன்று என் தேவதை என் கண் முன்னே பிஸி யாக அலைந்து திரிந்து கொண்டிருந்தாள். இரண்டு நாளானது. சித்தி எந்த வித டென்ஷன் இல்லாமல் இயல்பாய் இருந்தாள். 

 

என்னை கண்டுக்கவே இல்லை. 

வேண்டும் என்றே பண்ணுகிறாளா?. இல்லை எனக்குத்தான் அப்படி தோணுகிறதா? தெரியவில்லை. அவள் முகத்திலிருந்து எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. அழுத்தக்காரி. மொத்தத்தில் என்னால் தான் நிம்மதியாக இருக்க முடியவில்லை. 

 

 நாளை மறுநாள் கிளம்பி கோவை போக வேண்டும். மதியம் அப்பா கார் அனுப்பி விடுவார். எந்த டிலேயும் இருக்காது எனக்கு காலேஜ் மீனாவிற்கு ஸ்கூல் எதையும் மாற்ற முடியாது. இன்னும் ஒரு நாள் தான், எனக்கு என்ன பண்ணுவது என்றே புரியவில்லை. 

 

மறுநாள் உறவுக்காரர்கள் அனைவரும் விடிகாலையில் கிளம்பி போனார்கள். வீடு அமைதி யாக இருந்தது. என் மனதிற்குள் புயலடித்துக் கொண்டிருந்தது. காலையிலிருந்து வெளியே க்ளைமேட் அமைதியாக மழை வரும்போல் இருந்து, நல்ல குளிர்ச்சி யான காற்று வீசிக்கொண்டிருந்தது. சித்தி யை காலையிலிருந்து பார்க்க முடியவில்லை. அது வேறு மனசு பாரமாக இருந்தது.

வேண்டா வெறுப்பாக டிஃபன் சாப்பிட்டு விட்டு ஹெட்போன் மாட்டிகிட்டு வெளி வராந்தாவில் இருந்த போது. ஒரு 10 மணி போல் பண்ணை வேலை பெண் வந்து.

 

தம்பி, சின்னம்மா உங்களை நம்ப ஆத்து கரை ஐயனார் கோவிலுக்கு ஒரு 15 நிமிசத்தில வரச் சொன்னாங்க. என்றாள்.

 

எங்கே சித்தி என்று கேட்டதுக்கு, அவங்க காலையிலேயே ஆக்டிவா வண்டியில பண்ணை தோட்டத்துக்கு போயிட்டாங்க. அவங்க அப்படியே கோவிலுக்கு வரேண்ணாங்க.

 

சரி, நான் வரேன் தம்பி,

 

இப்பதான் நிம்மதியாக இருந்தது. காத்துல எழும்பி பன்ச் பண்ணி குதிக்க னும் போல இருந்தது. அப்பாடா, சித்தி யை ஊருக்கு போறதுக்குள்ள பார்த்து பேசிடலாம். அதுவும் சித்தியே வரச் சொல்லி.

 

ஏதேதோ மனசுக்குள் ஓடியது. சித்தி மனசு மாறியிருக்குமா?. கன்வின்ஸ் ஆயிருப்பாளா?. அதான் 2 நாள் யோசிக்க எடுத்துக்கிட்டாளா?. கன்வின்ஸ் ஆகி இருந்தால் அப்படியே சித்தியையும் ஊருக்கு கூட்டிட்டு போயிடலாமா?. என்ன அவங்க அக்கா வீடு தானே?. யார் என்ன சொல்ல போறாங்க. மனசு நிறைய விடையில்லா கேள்விகளுடன், அவசர அவசரமாக டி சர்ட், ஜீன்ஸ் ல் கிளம்பி கோவிலுக்கு போனேன். வீட்டிலிருந்து பக்கம் தான். வண்டி எடுத்தால் யாராவது கேட்பார்கள். எதுக்கு வம்பு ஓட்டமும் நடையுமாக போய் சேர்ந்தேன்.

 

அருமையான, அமைதியான இடம். கோவிலை ஒட்டி கல கல வென ஆறு மெதுவாக ஓடிக்கொண்டிருக்க. கோவிலின் பின் புறம் காம்பவுண்ட் ஐ ஒட்டியவாறு ஓர் ஆலமரம் ஏகத்திற்கும் பெரிதாய் படர்ந்து விரிந்து மொத்த இடத்திற்கும் குளிர்ச்சியான நிழலை தந்து கொண்டிருந்தது. 

 

சுற்று பக்கத்தில் யாரும் இல்லை. தனிமையில் சந்திக்க நல்ல இடம். வழி நெடுக வித விதமான மரங்கள் நிறைய வேப்ப மரங்கள். மப்பும் மந்தாரமான வானிலை. கோவிலை நெருங்க, சித்தி வண்டி பார்க் பண்ணியிருந்தது தெரிந்தது. 

 

கொஞ்ச தூரத்தில் ஆற்றங்கரையில் சித்தி பின்புறம் ஒரு கவிதை போல தெரிய மனம் சிறகடித்தது. சற்று ஆற்றுப்பக்கம் திரும்பி பக்கவாட்டில் நடந்து கொண்டே. வெளிர் நீல சேலை கருப்பு ஜாக்கெட்டில். போனில் யாருடனோ பேசி கொண்டு. காற்றில் சேலை பட பட க்க, காற்றில் ஆடும் முன்புற முடிகளை சரிசெய்தவாறு. என் கண்களுக்கு ஓர் ஓவியம் போல் மிக அழகாக தெரிந்தாள். நெற்றியில் சிறு விபூதி கீற்றல். இன்னும் அழகு சேர்க்க, ஃபோனில் யாருடனோ பேசி முடித்து விட்டு. நான் கிட்ட நான் வந்தவுடன்.

 

வந்துட்டியா?.  

என்று பக்கத்தில் வந்து என் நெற்றியில் விபூதி பூசி விட்டு, கையை புருவம் மீது வைத்து மெதுவாக ஊதிவிட்டாள். உடம்பு அப்படியே சிலிர்த்தது.

 

கண்கள் மூடியிருந்த எனக்கு தென்றல் தழுவி சென்றது போல் இருந்தது. முடிந்தால், சித்தி ஊதிய காற்றை அப்படியே பிடித்து எனக்குள்ளே எப்பொழுதும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. 

 

அப்பறம் சிவா, என்ன நாளைக்கு ஊருக்கா?. 

ஆமாம் னு தலையாட்டினேன்.

 

கொஞ்சம் நேரம் அமைதி.

 

காற்றின் விர் விர் வென்ற சப்தம்.

கோவில் அரச மர இலைகள் சல சல சப்தம்.

 

என் இதயத்துடிப்பு எனக்கே நன்றாக கேட்டது.

தூரத்தில் குயில் கூவுவது இங்கு நன்றாக காதில் விழுந்தது.  

ஆனால் அதை ரசிக்கும் நிலையில் நான் சத்தியமாக இல்லை.

எங்கோ தூரத்தில் போகும் இரட்டை மாட்டு வண்டி மாடுகளின் மணிகள் அசைந்தாடும் சப்தம் மெல்ல மெல்லக் குறைந்து கொண்டே போனது.

நேரம் ஆக ஆக.

ஏதோ விரும்பத்தகாத ஒன்று நடக்க போகின்றது என்பது மட்டும் நன்றாக புரிந்தது.

 

மௌனத்தை உடைத்த படி.

 

சித்தி, சிவா போய் நல்லா படி. மனசை அலைபாய விடாதேனு ஆரம்பிக்க.

 

உடனே நான், சித்தி அன்னைக்கு நாம டிஸ்க்கஸ் பண்ணிணத பத்தி என்று சொல்லி முடிப்பதற்குள்.

 

சிவா, சிவா டேய் உன்னய எனக்கு ரொம்ப பிடிக்கும் டா.

 

எனக்கும் உன்னய ரொம்ப பிடிக்கும் சித்தி.

 

வாய மூடு, நீ சொல்லுற பிடிக்கும் கிறதுக்கும் நான் சொல்ற பிடிக்கும் கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.

 

நீ என் அக்கா பையன்.

 

நம்ப இரண்டு பேருக்கும் வயசு வித்தியாசம் அதிகம்.

நீ என்ன விட சின்னவன்.

 

அதெல்லாம் ஒரு பிரச்சினை இல்லை சித்தி. நம்ப டெண்டுல்கர் னு நான் ஆரம்பிக்க,

 

ஆ ஊ ன்னா இத சொல்லிடுங்கடா. டெண்டுல்கர், அமிதாப் பச்சன், அப்பறம் யாரு இந்த ஆக்டர் சரத்பாபு லைஃப் பார்ட்னர்.

 

இங்க பாரு, இதெல்லாம் ஒத்து வராது. அவங்கள்ளாம் சித்தி - பையன், ப்ளட் ரிலேஷன் இந்த மாதிரி சம்பந்தம் கிடையாது.

 

இல்ல சித்தி,.

 

இரு, இப்ப என்ன னு கூப்பிட்ட.

 

சி..த்..தி..னு.

 

அதுக்கு அர்த்தம் தெரியுமா?.

அம்மா சின்னம்மா னு.,

எனக்கு நீ பையன் மாதிரி 

அதான் முறை. எதுவும் மாறாது மாத்தவும் முடியாது.

 

கொஞ்சம் அமைதி.

 

நான் மெதுவாக, சித்தி இப்ப இரண்டு ஆண்களே கல்யாணம் பண்ணி லைஃப் பார்ட்னர் ஆகிகிறாங்க. பொண்ணு ங்க கூட, இங்க கூட சட்டம் வந்தாச்சு. எல்லாரும் அக்சப்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.

இன்னும் சொல்லப்போனால் லெஸ்பியன்ஸ் கூட,.

 

சித்தி, முதல்ல வாயை கழுவுடா.

என்னென்னவோ பினாத்துற.

நான் என்ன சொல்றேன். நீ என்னமோ..

புரிஞ்சி தான் பேசுறியா?.

 

இதெல்லாம் நமக்கு ஒத்து வராது. ப்ளட் ரிலேஷன் இரண்டு பேர் லவ், கல்யாணம் நினைச்சு பார்க்க முடியலை. 

 

ஒரு வகையில் நீ இந்த மாதிரி ஆனதுக்கு நான் தான் காரணமோ னு தோணுது.

அக்கா வுக்கு தெரிஞ்ச துனா? ஏன் உன் பாட்டி. தாத்தா க்கு தெரிஞ்சா? ஊருல தல காட்ட முடியுமா?

 

நான் சொல்றத கேளு,. இதெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு. படிச்சி உருப்படுற வழியை பாரு னு நிறுத்த.

 

நான் நிலைமை யை புரிந்து கொண்டு,.

 

சித்தி நீ என்ன சொன்னாலும், என்னோட லவ் சத்தியமானது.

 

நீ இல்லாமல் என்னால இருக்க முடியாது. என் வாழ்க்கை யும் முழுமை பெறாது. எனக்கு ஒரு கல்யாணம், வாழ்க்கைனா அது உன் கூடத்தான். உன்கூட மட்டும் தான். இல்ல னா வேற எந்த லைஃப் ம் எனக்கு தேவையில்லை. உன்னை நான் அப்படி லவ் பண்றேன். அதை ஏன்நீ புரிஞ்சிக்க மாட்டேங்குற னு. சொல்லி சித்தி யை பார்த்த போது நின்றபடியே தன் நெற்றியில் கை வைத்து கொண்டு கீழே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

 

நான் கொஞ்சம் எமோஷனல் ஆகி,. 

 

கரகரத்த உடைந்த குரலில், சித்தி இப்ப சொல்றேன். உன் மேல வச்ச என்னோட 

 லவ் உண்மைனா, அது கண்டிப்பா ஜெயிக்கும். எனக்கு அந்த நம்பிக்கை 100 பர்சண்ட் இருக்கு. உன்னை கல்யாணம் பண்ணி கிட்டு, உன் கூட வாழ எந்த ரிஸ்க்கும் எடுக்க நான் தயார். அதுல என் உயிரே போனாலும் பரவாயில்லை. 

ஏதோ சின்ன பிள்ளை தனமான உளறல் னு நினைக்காதே. நான் decide பண்ணிட்டேன். நீ இல்லன்னா எனக்கு வாழ்க்கையே இல்லை. நீ தான் என் சர்வமும் னு முடிக்க,. 

 

சின்ன விம்மல் சித்தி யிடமிருந்து வந்தது. 

 

எனக்கே மனசு கஷ்ட்டமாக போய்விட்டது.

பக்கத்தில் போய் சித்தி னு தொட போக, டக்கென்று திரும்பி என்னை அப்படியே கட்டி பிடித்து,. என் தோளில் சாய்ந்து தலைவைத்து விம்மலோடு,. சிவா, உன் லவ் க்கு நான் அருகதை கிடையாதுடா புரிஞ்சுக்கோ ப்ளீஸ் .

நான் அப்படியே சித்தி யை மெதுவாக அணைத்து கொண்டேன். இந்த அணைப்பில் காமம் இல்லை ஆறுதல் தான் இருந்தது. அது சித்தி க்கும் புரிந்திருந்தது.

சில செகண்ட் தான்,.சித்தி டப் பென்று விலகி சரி வா வீட்டுக்கு போகலாம் என்றாள்.

நான் அப்படியே நிற்க,.

 

என்னடா?. என்றாள்.

 

மெதுவாக., மனசு ரொம்ப வலிக்குது சித்தி.,

 

டேய், சிவா என்னடா.. என்னாச்சு?.

 

நான் கையை உயர்த்தி, இரு என்று சைகை காட்டி,.

இந்த மாதிரி நான் எப்பவும் இருந்ததில்லை சித்தி,.

நீ இல்லாத வாழ்க்கை யை என்னால நினைச்சு கூட பார்க்க முடியலை. ஏன்னா என் மனசு ல நீ ஆழமா பதிஞ்சிட்ட,. 

தெரிஞ்சோ தெரியாமலோ, அந்த சந்தர்ப்பத்துல உன்னை நான் அப்படி தொட்டதுக்கப்பறம்,.

என் உயிர், மனசு என் கிட்ட இல்லை. 

மத்தவங்க மாதிரி கிடைச்ச வரைக்கும் லாபம். அடுத்த ஆளை பார்த்துட்டு போற ரகம் நான் கிடையாது.

 

சித்தி என்னை நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் நீர் ததும்பியிருந்தது.

 

இது வாலிப கோளாறோ, காமமோ இல்லை. ஆத்மார்த்தமான பரிசுத்தமான அன்பு. சித்தி நீ என்னோடவள்.  

இதுல என்னை பொறுத்தவரை எந்த மாற்றமும் இல்லை. நீ, நான் னு பிரிச்சு பார்க்கலை.

 நீ எப்பவோ என்னோட உயிரில் கலந்துட்ட,. நீ இதை எப்ப கேட்டாலும், எத்தனை வருசம் ஆனாலும், இதைத் தான் சொல்வேன். இனி எப்படி சொல்லி எக்ஸ்பிளயின் பண்றதுன்னு எனக்கு தெரியலை.

 

உன் மனசை கஷ்டப்படுத்து னம்னு நினைக்கலை. அப்படி இருந்தால் அது என்னயே நான் கஷ்ட்டப்படுத்திக்கிற மாதிரி. வேற எதுவும் சொல்றதுக்கு இல்லை என்று முடிக்க.,.

 

பூரண அமைதி.

 

காற்று கொஞ்சம் பலமாக வீச. ஐயனார் கோவில் ஆல மரத்தில் கட்டியிருந்த மணிகள் கிண் கிணி நாதம் காற்றோடு கலந்து தொடர்ந்து வந்தது.

 

சித்தி, சரி இப்போதைக்கு இதை அப்படியே விட்டுடலாம். நீ ஊருக்கு கிளம்பு. யார் கிட்டயும் எந்த டிஸ்க்கஸனும் வேணாம். யாருக்கும் எந்த டவுட் ம் வராம பார்த்துக்கோ.

ஊருக்கு போய் இதையே நினைச்சு கிட்டு இருக்காதே. முக்கியமா என்ன நீ செல் போன்ல கான்டாக்ட் பண்ண try பண்ண கூடாது. மெஸேஜ் கூட,.

 

என்ன நான் சொன்னா கேட்பல?. 

 

சித்தி நீ எது சொன்னாலும் கேட்பேன் என்றேன்.

சித்தி முகத்தில் புன்முறுவல் பூத்தது.

கன்னக்குழி இன்னும் அழகு சேர்த்தது.

சரி வா போகலாம் வண்டிய எடு.

 

சித்தி என்றேன்.

 

என்னடா?.

 

உன் மனசை காயப்படுத்திருந்தா ரியலி சாரி., என்ன மன்னிச்சிடு.

 

ப்ச்சு., என்று தலையாட்டினாள்.

 

ஒரு ரிக்வஸ்ட்.

 

என்ன வென்று புருவம் உயர்த்தி பார்க்க.

 

ஒரே ஒரு தடவை உன்னை Hug பண்ணணும்.  

வித் யுவர் பர்மிஷன் என்றேன்.

 

கண்கள் விரிந்து, கைகளை நீட்டி புன்முறுவலோடு வா என்றாள்.

 

அணைத்து கொண்டேன்.

ஒற்றை ரோஜா பூவின் வாசம் கிறங்கடித்தது. கூடவே சித்தி யின் ஃபேவரைட் பெர்ஃப்யூம். 

 

இன்னொரு ரிக்வஸ்ட் என்றேன் அவள் காதருகில்,.

தோளில் இருந்து தலையை எடுத்து என்ன வென்று கண்களால் கேட்க,

 

ஒரே ஒரு முத்தம் சித்தி என்றேன். மெல்லிய குரலில்.

 

முகத்தில் சின்ன அதிர்ச்சி.  

 

ஒன்றும் பேசாமல் கைகளை தோளில் இருந்து எடுக்காமல்.

முகத்தை தூக்கி, தன் கண்களை மூடியபடி, லிப்ஸ் கிஸ் காக தயாரானாள். 

 

என் மண்டைக்குள் ஆயிரம் மின்னல் வெடித்து சிதறியது. என் தேவதையின் அழகு முகம் மறுபடியும் என்னருகில்,.

சித்தியின் முகம் பூரணநிலவை போல் ஜொலித்தது. கீழ் உதட்டோர மச்சம் கூடுதல் அழகு சேர்த்தது. நெற்றி கேசம் காற்று கேற்ப நடனமாடி கொண்டிருந்தது.

 

சித்தி யின் முகத்தை என் இரண்டு உள்ளங்கைகளில் ஏந்த, ரோஸ் கலர் அவள் உதடுகள் மெதுவாக துடித்தது. 

மூடிய கண்களுக்குள் விழிகள் அங்கும் இங்கும் சிறிது உருண்டன. கூரான நாசி சிறிது விடைத்தது. என் தோளை பிடித்திருந்த அவள் மலர் கரங்கள் கொஞ்சம் என்னை இறுக்கின.  

என் முகத்தை அவள் கண்ணம் அருகில் கொண்டு போன போது, அவள் சுவாசம் அதிகமானது. ஈரமான 

உதடுகள் சற்றே குவிந்தது. 

 

கீழ் உதட்டின் கீழேயுள்ள மச்சம் என்னை கிறுகிறுக்க வைத்தது. மனதை அலைய விடாமல் கன்ட்ரோல் பண்ணிக்கொள்வது ரொம்ப கடினமாக இருந்தது. இருந்தாலும்.,

 

மெதுவாக அவள் முன் நெற்றி வகிடில் முத்தமிட்டேன்.

என் கண்களிருந்து கர..கர.. வென்று கண்ணீர்.

சித்தியின் கண்ணீரோடு ஒன்றாய் கலந்

தது.

சித்தி, விம்மலோடு, என் தலையை கீழே இழுத்து பிடித்து என் நெற்றியில் முத்தமிட்டு என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். 

எங்கள் கண்ணீரோடு மழை யும் சேர்ந்து கொண்டது.

 

தொடரும்...