Sivavin Sithi.. Please.. 2 (Part 1) books and stories free download online pdf in Tamil

சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 (Part 1)

Hi,
நான் உங்கள் சிவா.
மறுபடியும் எல்லோரையும் இந்த கதை மூலம் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. சித்தி.. ப்ளீஸ்..1 என்ற காதல் காவியம் எல்லோரையும் நன்றாக Reach ஆனதில் ரொம்பவும் Happy. நிறைய பேர் Comment Box ல், Mail ல் வந்து personal ஆக வாழ்த்துக்கள் சொல்ல, நிறைய அன்பர்கள் அவர்கள் தங்கள் Wishes யை தெரிவிக்க, நானும் மாலினி யும் நெகிழ்ந்து போனோம்.

ஒவ்வொருவருக்கும் எங்கள் நன்றி யைத் தெரிவித்து கொள்கிறோம். அதுவும் நான் எழுதும் Style நன்றாகவே இருந்தது என்று பலரும் பாராட்ட.. Thanks to all'. இப்போது இது. சித்தி.. ப்ளீஸ்..1 ன் தொடர்ச்சி..
Actually இந்த சித்தி.. ப்ளீஸ்..2 தொடரை மறுபடியும் தொடர idea வே இல்லை, விருப்பமும் இல்லை. ஆனால் மாலினி இந்த தொடருக்கான கருவை சொல்லி அதை கொஞ்சம் Develop பண்ணி காண்பிக்க.. அசந்து போனேன். Really I Astonished and Thrilled. அதுவும் என் தேவதை சொன்ன பிறகு மறுக்க முடியுமா?. இதோ அந்த கதை.. ஒரு அமானுஷ்ய தொடராக..
இந்த கதை சித்தி.. ப்ளீஸ்..1 நடந்து ஒரு 20, 25 வருடங்கள் கழித்து நடப்பது போல எனது Style ல் Try பண்ணியிருக்கேன்.
வழக்கம் போல உங்கள் ஆதரவுடன்
-உங்கள் சிவா.

சிவாவின் சித்தி.. ப்ளீஸ்.. 2 (Part 1)

என் பெயர் சிவக்குமார். நான் ஒரு எழுத்தாளரும் கூட, எல்லோரும் என்னை சிவா என்றே கூப்பிடுவார்கள்.
இப்ப என் வயசு 58. Voluntary Retirement வாங்கிட்டு, வந்த பணத்தில் திருவனந்தபுரம் Outskirts பக்கம் கிராமத்தில் கொஞ்சம் தோட்டம் நிலம் சேர்ந்தாற்போல் கொஞ்சம் Distance ல் இரண்டு வீடுகள் வாங்கி போட்டு தனிமையில் என் காலத்தை கழித்து கொண்டிருக்கிறேன். ஒரு வீட்டில் நானும் இன்னொன்னு வாடகைக்கு விடலாம்னு idea. வீட்டை கொஞ்சம் Modify பண்ணி நல்ல பழங்காலத்து தேக்கு Furniture வாங்கி போட்டு வீட்டை எல்லாம் புது Paint Distemper அடித்து Ready பண்ணி வைத்திருந்தேன். நானும் என் ஃப்ரண்ட் சாமிநாதனும் இங்கே 6 வருஷத்துக்கு முன்ன வீடு, தோட்டம் எல்லாம் வாங்கும் போது சுத்தி ஒண்ணுமே கிடையாது. கொஞ்சம் பொட்டல் காடுதான். ஆனால் இப்ப, நாங்கள் குடி வந்த பிறகு திடீரென்று ஒரு 2, 3 வருசத்துக்குள்ள IT Companies சுத்தி நிறைய வந்து, Area மொத்தம் Busy ஆயிடுச்சு. அதான் ஒரு நல்ல Family க்கு I.T ல Work பண்ற Employees யாராவது கேட்டால் நல்ல Couple ஆக இருந்தால் வீடு வாடகைக்கு கொடுக்கலாம்னு idea பண்ணி வச்சிருந்தேன்.

பக்கத்தில் கொஞ்சம் கூப்பிடு தூரத்தில் சாமிநாதன் வீடும். இங்கே எல்லா வீடுகளும் அப்படிதான். Individual House தள்ளி தள்ளி, தோட்டங்களுடன். தனிமை, நல்ல Privacy, But அதுவே கொஞ்சம் தொல்லை தான். ஆத்திர அவசரத்திற்கு யாரையும் கூப்பிட முடியாது. நல்ல வேளை இந்த Cellphone வந்தது. இல்லன்னா இங்கேயிருந்து பெயரைச் சொல்லி கத்தி கூப்பிட்டு அவங்க வரதுக்குள்ள நம்ம உயிர் போய் உயிர் வரும். நான் ஒண்டி கட்டைதான். Wife எப்பவோ 10 வருஷத்துக்கு முன்னாடி போய் சேர்ந்தாச்சு. ஒரே பொண்ணு சுதா அவ நல்லா படிச்சி IT யில நல்ல Experience எடுத்துகிட்டு இப்ப London ல Marriage பண்ணிகிட்டு Settle ஆயிட்டா. ஒரு பேத்தி ஸ்வேதா எனக்கு. இந்த Cellphone, wifi, iPod, Digital Media, 5G இந்த மாதிரி technology improve ஆகி நம்ம கைக்கு வந்ததுக்கப்பறம் நம்ப சொந்தங்கள் எவ்வளவு தூரமானலும் நம்ம பக்கத்தில இருக்கிற மாதிரியே Feeling.

எனக்கு இப்ப கொஞ்ச நாளாவே எனக்கு என் பொண்ணு சுதாவை பார்க்கனும், என் கூடவே இந்த வீட்ல அவ இருக்கனும்னு தோணிகிட்டேயிருந்தது. இதையெல்லாம் அவ கிட்ட பேசுனா, அப்பா Please Be Practical.. உங்க மாப்பிளைக்கு இப்ப Office ல Leave No chance. அப்பறம் எனக்கு Office ல as per Roster Next Yr. தான் Eligible, அப்பதான் Leave Apply பண்ண முடியும். நடுவுல Recession வேற.‌ ஸ்வேதா க்கு School.. ஆனா இந்த yr. முடிஞ்சா Christmas Leave க்கு Try பண்றோம்.

இதையேத்தான் Laat 5 years ஆ சுதா சொல்லிகிட்டிருக்கா. எப்ப? என்ன? தெரியாது.
என்னமோ போ, இப்படியே வாழ்க்கை பிடிப்பில்லாமல் ஏதோ போய்க்கொண்டிருந்தது.

ஒரு நாள் காலை என் வீட்டு Calling Bell அடிக்க, கதவை திறந்து பார்த்தால் ஒரு Young Couple. தூரத்தில் Compound Gate அருகே அவர்கள் வந்த Pulsar Bike நின்று கொண்டிருந்து.

Sir, வீடு Rent க்கு

ஆமாம், நீங்க

சார் என் பெயர் பிரசாத். இவங்க என் Wife யாழினி.

அந்த பெண் முன்னே வந்து எனக்கு வணக்கம் சொல்ல அந்த பெண்ணை எனக்கு எங்கோ பார்த்தது போல இருந்தது. நல்ல அழகான முகம், Height, Slim ஆக, நல்ல எழுமிச்சை கலர். கொஞ்சம் கூர்ந்து கவனித்ததில் உதடுக்கு கீழே மச்சம். எனக்கு எங்கேயோ எதையோ ஞாபகப்படுத்தியது. பையன் பிரசாத்தும் அந்த பெண்ணிற்கு ஏற்றார் போல நல்ல ஜோடி பொருத்தம். நல்ல Height, Arms Body, நல்ல கலர் Hero மாதிரி இருந்தான்.

சார் எங்களுக்கு கல்யாணம் இப்பதான் Recent ஆ ஆனது. எங்க ஊர் கோயம்புத்தூர். எனக்கு இங்க I T Company ல Job.
நீங்க Family க்கு மட்டும் தான் வீடு Rent க்கு கொடுப்பிங்கனு விசாரிச்சதில பக்கத்தில சொன்னாங்க. அதான் பார்த்து பேசிட்டு போகலாம் னு வந்தோம்.

எனக்கு அவர்கள் இருவரையும் ரொம்ப பிடித்து போக, சரி வாங்க வீட்டை பார்க்கலாம் என்று நான் உள்ளே போய் சாவி எடுத்து கொண்டு வர, என் வீட்டிலிருந்து Just பக்கம் தான் ஒரு 40 அடி தூரத்தில் Individual House. இரண்டு வீட்டிற்கும் சேர்ந்தால் போல தோட்டம், தென்னை, மா, வேப்ப மரங்கள் அதை சுற்றி Fencing, Main Gate டன். தோட்டத்திற்கு தனியாக இருவரை வேலைக்கு போட்டு குப்பை கூளம் இல்லாமல் Neat ஆக Maintain பண்ணி வைத்திருந்தேன்.
வீட்டை எல்லாம் சுத்தி காண்பிக்க இரண்டு பேருக்கும் வீடு ரொம்ப பிடித்து போய் விட்டது. அதிலும் அந்த பெண் யாழினிக்கு ரொம்பவும் பிடித்து போக, உடனே இங்கே வந்து விடலாம் என்று தன் Husband டம் சொல்லிக் கொண்டே இருந்தாள்.

என் இரண்டு வீடுமே ஒரே மாதிரி Kerala Style ல் Round ஆக கட்டப்பட்டு நல்ல தேக்கு மரத்தில் தூண்கள் செய்யப்பட்டு நல்ல விசாலமாக காற்றோட்டமாக முன் பக்கம் திண்ணை களுடன் இருந்தது.
பின் பக்கம் சின்ன தோட்டம் காய்கறிகள், பூக்கள் வகைகள், அந்த காலத்து கேணி இன்னும் தண்ணீருடன் எல்லா வசதிகளும் இருக்க. சமீபத்தில் தான் இரண்டு வீட்டையும் Revamp பண்ணி எந்த வித Seepage இல்லாமல் எல்லாம் சரிபண்ணி வைத்திருந்தேன்.

மேற்கொண்டு நான் வீட்டை Full Furnitured House ஆக, 2 AC, Washing machine, Fridge, Geyser Gas Stoves etc.. எல்லாம் Provide பண்ணி பழைய பாரம்பரியம் மாறாமல் வீட்டை வைத்திருக்க, இருவருக்கும் வீடு பிடித்து போய் விட்டது.
எல்லாம் பார்த்தபின் வெளியே வந்து

என்னப்பா பிரசாத் வீடு பிடிச்சிருக்கா? உன் Wife என்ன சொல்றாங்க? இங்கே நல்ல தண்ணி 24 Hrs ம் வரும். தண்ணிக்கு Problem யே இல்லை. பத்தாததுக்கு கேணி அடிபம்ப் Tank, Motor எல்லாம் இருக்கு.

சார் வீடு சூப்பரா இருக்கு. யாழினிக்கும் வீடு ரொம்ப பிடிச்சி போச்சு. இனி உங்க Condition, Rent, Advance இதெல்லாம் தான் பேசனும். நாங்க குறைஞ்சது 6 மாசமாவது இருப்போம். அப்பறம் Office ல எங்கே Transfer போடுறாங்களோ? அது Foreign ஆ எங்கேயோ தெரியாது.

இதற்குள் சாமிநாதனும் வர அவர்களுக்கு அவனை என் Friend என்று Introduce பண்ணி வைத்து விட்டு, பக்கத்தில தான் நம்ம சாமிநாதன் அவங்க வீடு. நீங்க மாமி யோட ஃபில்டர் காபி சாப்பிடனுமே ஆஹா அமிர்தம் போங்க,

டேய் சாமி, குழந்தைகளை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் மாமி கையால காபி போட்டு கொடுறா. நான் கதவை எல்லாம் பூட்டிட்டு வந்தர்றேன்.
டேய் எனக்கும் காபிடா மறந்துடபோற.

டேய் சிவா உனக்கு இல்லாமலா? இல்லனா அப்படியே விட்டுடுடவ பாரு அழிச்சாட்டியம் பண்ணிட மாட்ட.

புதிதாய் வந்திருந்த தம்பதிகள் எங்கள் Friendship மற்றும் அன்னியோன்யத்தை பார்த்து வியந்து சிரித்து கொண்டே வந்தனர்.
சாமி வீட்டில் எல்லோரும் காபி சாப்பிட்டு கொண்டே எல்லா விபரங்களையும் பரிமாறிக்கொள்ள, யாழினியும் மாமி யும் உள்ளே ஏதோ Interesting ஆக பேசிக்கொண்டு இருந்தார்கள். பிரசாத் மறுபடியும் Rent பற்றி கேட்க, நான் Rent, Advance எல்லாம் சொல்லிவிட்டு எனக்கு ஒரே ஒரு கண்டிஷன் தான் நல்ல Family யா இருக்கனும். மத்தபடி வேற எதுவும் இல்லை.

பிரசாத் உள்ளே போய் யாழினி யுடன் பேசிவிட்டு. சார் எங்களுக்கு எல்லாம் ஓகே. நாளைக்கே குடி வந்துடலாம் னு பார்க்கிறோம்.
நாளைக்கு நல்ல நாளா? தெரியனும்.

அதற்குள் மாமி காலண்டர் எடுத்து வந்து நாளைக்கு அமோகமான நாள் நாளைக்கே காலையில பால் பொங்கி குடி வந்துடுங்க.
எல்லாம் நல்லபடியா நடக்கும். என்று யாழினி யை உள்ளே கூட்டி சென்று குங்குமம், பூ கொடுத்து அனுப்பி வைத்தாள். அவர்கள் தங்கள் Bike ல் போன பிறகு மாமி எங்களிடம் வந்து நல்ல ஜோடி இரண்டு பேரும். என் கண்ணே பட்டுடும் போல இருக்கு. அந்த குழந்தை யாழினி.. நல்ல தமிழ் பெயர், என்ன அழகு, கலர், தேஜஸ், அந்த உதட்டுக்கு கீழே மச்சம் லட்சுமிகரமா இருக்கா. உள்ள பேசிண்டிருந்தப்ப அவங்க லவ் Marriage ஆம். சொல்லிண்டிருந்தாள்.
ஆனால் வீட்டில ஒத்துக்க வச்சி, இத்தனைக்கும் சொந்தம் தானாம். நிறைய problems face பண்ணி ஒரு வழியா இப்ப தான் கல்யாணம் மருதமலையில வச்சு ஆச்சாம்.

எனக்கு மாமி சொல்லதை கேட்க அதுவும் மச்சம், மருதமலை கல்யாணம் இதையெல்லாம் கேட்க ஏதோ பொறி தட்டியது. யாழினி யை பார்க்கும் போது குறிப்பாக அந்த உதட்டு கீழ் மச்சம் பார்த்த போது பழைய ஞாபகங்கள் வந்தன. ரொம்ப வருஷங்களுக்கு முன்னால் நான் எழுதிய கதையில் வரும் Characters சிவா, மாலினி சித்தி ஞாபகம் வர என் உடம்பு சிலிர்த்தது. இப்படியெல்லாம் நடக்குமா? ச்சே இதெல்லாம் Co incidence தான்.

அடுத்த நாள் பிரசாத்தும் யாழினியும் வீட்டிற்கு குடி வர நான் சாமி, மாமி, தோட்ட வேலை செய்பவர் முன்னாடியே சொல்லி வைத்திருந்தேன், எல்லாம் Help பண்ணி சாமியை கும்பிட்டு பால் காய்ச்சி எல்லோருக்கும் பால் வர மாமி செய்த அடபிரதமன் Sweet டன் சாப்பிட்டு கொண்டிருந்தோம்.
Kitchen லிருந்து யாழினி உரிமையுடன் சிவா.. சிவா இங்கே வா, வந்து இதை எடுத்துட்டு போ என்று கூப்பிட,

நான் என்னம்மா என்னயா கூப்பிட்ட என்று கேட்க,

ஐயோ இல்லப்பா, நான் சிவா அவரை அதான் என் Husband யை கூப்பிட்டேன்.
எனக்கு அதிர்ச்சி.. என்னம்மா பிரசாத் தானே பேரு.

அதற்குள் பிரசாத் வந்து அப்பா, என் முழுப்பெயர் சிவபிரசாத். யாழினி சிவா னு தான் எப்பவும் கூப்பிடுவா. வீட்லயும் சிவாதான். Office ல மட்டும் தான் பிரசாத். ஏன்னா Office ல இரண்டு மூணு சிவா இருக்காங்க. Confuse ஆகிறாங்க. இங்க கூட பாருங்க உங்க பேரும் சிவாதான். எல்லோரும் சிரிக்க.

எனக்கு மண்டைக்குள் ஏதோ குறு குறு வென்று ஓடியது.
மனதிற்குள் பேர் கூட Match ஆகுது.
சிவா - மாலினி
சிவா - யாழினி அங்க கதையில சிவா மாலினி Marriage க்கு அப்பறம் 6 Months Bangalore போய் Settle ஆவாங்க. அப்படி தான் நான் எழுதியிருந்தேன். இப்ப இங்க Trivandrum அதுவும் I.T Job, 6 Months க்கு னு பிரசாத் சொன்னான்.. அப்பறம் Foreign.
இதுவும் Co incident ஆ?
யோசிக்க யோசிக்க மண்டை குழம்பியது.

முதலில் அந்த கதை எழுதிய டைரி யை தேடி எடுத்து பார்க்க வேண்டும். எங்கேயோ ஒரு ட்ரங்க் பெட்டியில் இருக்கும். எனக்கே அந்த சித்தி ப்ளீஸ் கதை யின் நிகழ்வுகள் சில மறந்து போய் விட்டது. அந்த கதையை எழுதி ஒரு 20 இல்ல 25 வருஷம் இருக்கும். திரும்பவும் எடுத்து படித்து பார்க்கனும்.

இந்த சிவா - யாழினி Couple ட இன்னும் ஏதாவது Match ஆகுதா னு பார்க்கனும்.
ஆனால் அந்த யாழினி யை பார்க்கும் போது நான் அப்போது கதையில் விவரித்து எழுதியிருந்த மாலினி போலவே இருக்கிறாள். அதுவும் அந்த உதட்டு மச்சம், Chance யே இல்லை. எனக்கு இப்போதுதான் ஞாபகம் வருது. அந்த கயல் நடிகை ஆனந்தி மாதிரியே யாழினியும் அப்படியே அந்த நடிகை ஆனந்தி மாதிரியே இருக்காள். எல்லாம் Perfect ஆ Match ஆகுது. என்ன நடக்குது ஒண்ணும் புரியலை.

ஆனால் யாழினி யை பார்க்கும் போதெல்லாம் எனக்கு தந்தை - மகள் உறவு போல மனதிற்குள் ஒரு பரவசமான Feelings. அதோடு அவளும் என்னை அப்பா என்று கூப்பிடும் போதெல்லாம் மனதுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கு. யாழினியை பார்க்கும் போது நான் உருவாக்கிய என்னோட கதை Charecter மாலினி மாதிரியே இருக்க, அதுவும் என் கண்முன்னே நடமாடுவதை பார்க்க எனக்கே ஆச்சரியமாக அதே சமயம் த்ரில்லிங்காகவும் இருக்கிறது.

வீட்டிற்கு போய் அந்த சித்தி.. ப்ளீஸ்.. கதை எழுதின டைரி யை தேடி கண்டுபிடித்து தூசி எல்லாம் தட்டி எடுத்தேன். கொஞ்சம் பழைய டைரி. கவர் Brown Leather ஆல் இருந்து நாளானதால் பழுப்பேரி இருந்தது. சுற்றி கட்டியிருந்த நாடாவை அவிழ்த்து புரட்ட, ரொம்ப வருஷமாக டைரியை தொடாததால் பழுப்பேரிய பேப்பர் வாசனை காட்டமாக நாசியை தாக்கியது. அந்த டைரியில் நிறைய எழுந்தியிருந்தேன். சில கணக்கு வழக்குகள், குறிப்புகள்.. கடைசியில் நான் எழுதிய சித்தி.. ப்ளீஸ்... கதை வர, பார்த்தவுடன் நெஞ்சம் கனத்தது. ஈஸிசேரில் படுத்து கொண்டு படிக்க ஆரம்பித்து அப்படியே அந்த கதையில் மூழ்கி போனேன். படித்து முடித்ததும் கதையில் உள்ள Charecters க்கும் சிவபிரசாத் யாழினி Couples உருவ ஒற்றுமை மற்றும் நிறைய விஷயங்களில் Match ஆனது. எனக்கு கொஞ்சம் திகிலானது போல இருக்க,
எது எப்படி இருந்தாலும், சிவபிரசாத் யாழினி யை பேர் சொல்லி தான் கூப்பிடறான். அதுவரைக்கும் நல்லது. நல்ல வேளை நம்ம கதையில் வர்ற Charecters மாதிரி சித்தி னு கூப்பிடலை. அது ஒண்ணுதான் இப்போதைக்கு ஆறுதல். சரி ரொம்பவும் யோசிக்க வேண்டாம். இதெல்லாம் சின்ன சின்ன Coincidence தான். இருந்தாலும் இதைப்பற்றி நம்ம சாமியிடம் Discuss பண்றது நல்லது என எனக்குப் பட்டது.

அன்னைக்கு Saturday Night 8.30 போல என் வீட்டில் நாங்கள் இருவரும் உட்கார்ந்து Rum Bottle டன் கச்சேரி ஆரம்பிக்க, சாமி Bottle யை பார்த்தவுடன் குஷியாகி விட்டான். நான் Veg. Salads, சிப்ஸ் மிக்சர் எல்லாம் Set பண்ணி Glass ல் Rum ஊற்றி Ready ஆகி,

சாமி உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.

எதுவா இருந்தாலும் இந்த First Round முடிச்சிட்டு தான்.

டேய் Matter Serious டா.

சரி இந்தா Glass ய பிடி Cheers..

இனி இவன் கேட்க மாட்டான். சரி First Round யை Complete பண்ணுவோம்.
அதற்குள் சாமி ஒரே வாயில் Glass யை கவிழ்த்து விட்டு
சீக்கிரம் ரெண்டாவதை போடு.

டேய் உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசணும் னு சொன்னேன்.

ஆமாம்ல..‌சரி என்ன விஷயம்?

அது என் வீட்டில குடி வந்திருக்காங்கள்ல பிரசாத் யாழினி அவங்கள பத்தி தான்.

அவங்களுக்கு என்னடா ரொம்ப நல்ல குழந்தைங்க, இரண்டு பேரும் ரொம்ப அன்யோன்யமா இருக்கா. பார்க்கவே அந்த ஜோடி கண்ணுக்குள்ளே நிக்கிறா. ஒண்ணு சொல்லட்டுமா? அவா நம்ம வீட்டுக்கு வந்த பின்ன தான் நம்ம மொத்த வீடும் கல கல னு இருக்கு. நம்ம மாமியும் அதத்தான் சொல்றா.

அதெல்லாம் சரிடா, அவங்க இரண்டு பேரும் நான் எப்பவோ எழுதின சித்தி ப்ளீஸ் கதையில் வர்ற இரண்டு Charecters மாதிரி அச்சு அசலா எனக்கு தோணுதுடா. தோற்றம், வேலை பேருலாம் கூட ஒத்து போகுது.

வாவ் சூப்பர் இந்த சிப்ஸ் நம்ம நாராயண் கடையில வாங்குனது தானே. அவன் கடையில தான் சிப்ஸ் நல்லா மொறு மொறு னு..

டேய் நான் இங்கே சீரியஸாக சொல்லிகிட்டிருக்கேன். நீ என்னமோ? சிப்ஸ் அது இதுன்னு..

எல்லாம் கேட்டுட்டுண்டு தான் இருக்கேன். என்ன உளர்ற.. நீ எப்பவோ எழுதின கதைக்கு இப்ப அவா உன் கண்ணு முன்னாடி வராளா? போடா Fool. இதெல்லாம் ஒரு வித Coincidence.. நாம் நினைச்சது நடந்துடுத்துனா உடனே பாரு நான் அப்பவே சொன்னேன் நடந்துடுத்து ம்போம். நடக்காததை பத்தி பேசவே மாட்டோம். Science, Technology எங்கேயோ போயிண்டிருக்கு, நீ வேற, படுத்தாதே. சீக்கிரம் இரண்டாவது ரவுண்ட் ஊத்து.

இரண்டாவது ரவுண்ட் Glass ல் ஊத்திகிட்டே அதில்லடா, என்னோட சித்தி ப்ளீஸ் கதையில வர்ற மாலினி Chatecter க்கு உதட்டுக்கு கீழே மச்சம் இருக்கும். இப்ப அதே மாதிரி நம்ம யாழினி க்கும் அதே இடத்தில உதட்டுக்கு கீழே மச்சம்.

சாமி ஹா..ஹா.. என்று பெரிதாக சிரித்து டேய் நம்ம தெரு முக்குல அந்த Culvert பக்கத்தில ரோட்டுல மரத்துக்கு கீழே மீன் வித்திகிட்டிருப்பாள்ல நம்ம கனகா சும்மா கும்முன்னு முன்னாடியும் பின்னாடியும் இருக்கும். அவளுக்கு கூடத்தான் உதட்டுக்கு கீழே மச்சம் இருக்கு அதுக்காக அவ உன்னோட கதை Heroine ஆயிடுவாளா? என்ன பேசுற நீ. சரி இரண்டாவது ரவுண்டை முடிப்போம்.

அடப்பாவி அந்த கனகா வை அப்படி வர்ணிக்கிற, இரு அடுத்த தடவை அவளை பத்தி சொல்லும் போது Record பண்ணி மாமி கிட்ட போட்டு காண்பிக்கிறேன்.

உனக்கு ஒண்ணு சொல்லட்டுமா? கிட்ட வா காதைக் கொடு. அவளுக்கும் என்மேல ஒரு இது. எப்படினா எப்ப நான் அந்த பக்கம் போனாலும் என்னய ஒரு மாதிரி பார்த்து சிரிப்பா. அப்படியே மேல முந்தானையை தளர்த்தி இறக்கி என்னய ஒரு கிறக்கமாக லைட்டா கீழ் உதட்ட கடிச்சு பார்ப்பா. என்னைக்காவது ஒரு நாள் மாமி ஊருக்கு போனதும் அவளை அதான் கனகாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து ஊம் ஊஹூம் பண்ணிட வேண்டியதுதான். ஆனா என்ன இந்த மீன் வாசனைதான் நமக்கு படாது. அவளை வரச்சொல்ல நல்லா வாசனை சோப் போட்டு குளிச்சிட்டு வரச்சொல்லனும்.

டேய் படுபாவி உன்னய ரொம்ப நல்லவன் னு நினைச்சிகிட்டிருந்தேன். ஒரு சுத்த பிராமணன் பண்ற வேலையா இது?

Sex ல என்ன ஓய் பிராமணன் அது இது னு பார்க்கிறது. தானா வந்து மாட்டுச்சுனா பொட்டலம் போட வேண்டியது தான்.

அதுசரி.. பாரு நம்ம Topic மாறி எங்கேயோ போயிடுச்சு. என்று இரண்டாவது ரவுண்ட் முடித்தோம்.

சாமி க்கு Max. மூணு ரவுண்ட் தான் அதற்கப்புறம் கர்னாடிக் சங்கீதம் ஆலாபனை பாட ஆரம்பித்து விடுவான். நல்லா கீர்த்தனைகள் பாடுவான். ஆனால் அதையே ராகத்தை இழுத்து இழுத்து பாட நமக்கு ஒரு வழியாயிடும்.
So, எதுவா இருந்தாலும் இப்ப அவன்கிட்ட Discuss பண்ணாதான் உண்டு.

சாமி எனக்கு இன்னும் மனசை போட்டு குடையுதுடா. நீ சொல்றதெல்லாம் ஓகே. ஆனா Something Fishy.
நான் எப்பவோ எழுதின கதை Charecters ஏன் இவ்வளவு நாள் கழித்து என் Life ல இவங்க இரண்டு பேருமா அதுவும் இப்ப வரணும். ஒண்ணும் புரியலை. நானும் Coincidence னு நினைச்சு மனசை தேத்தி கிட்டாலும் அடுத்து ஏதோ ஒரு incident நடந்து அந்த கதையோட Link ஆகுது.

சரி நீ இவ்வளவு சொல்றில. அந்த கதையை என் கிட்ட கொடு நானும் படிச்சி பார்த்துட்டு எல்லாம் Analyse பண்ணிட்டு அப்புறமா உன் கிட்ட என் அபிப்பிராயத்தை சொல்றேன்.

நான் உடனே எடுத்த வைத்திருந்த கதை டைரியை அவனிடம் கொடுக்க வாங்கி பத்திரப்படுத்தி கொண்டு
சரி அடுத்த ரவுண்டை ஆரம்பிப்போம் என்றான்.

இரு முதல்ல இன்னொரு விஷயம். என் கதையில அந்த சிவா Chatecter க்கு மாலினி சித்தி முறையா வரும். அது போக அவனும் எப்பவும் சித்தி னு தான் மாலினி யை கூப்பிடுவான். அப்படி தான் எழுதியிருந்தேன். ஆனா இப்போ இங்கே சிவபிரசாத் யாழினி யை..

வாவ் நல்ல Point. நீயே எடுத்து கொடுத்த. பிரசாத் நமக்கு தெரிஞ்சி யாழினி யை அப்படி சித்தி னு கூப்பிடலைல.

ஆனால் அவங்க வீட்டுக்குள்ள தனியா இருக்கும் போது சித்தி னு கூப்பிட்டால்?

ஓ நீ அப்படி வர்றியா? எனக்கென்னவோ பிரசாத் அப்படி கூப்பிட மாட்டான்னு தான் தோணுது. அப்படி ஏதாவது இருந்தால் அப்ப நீ சொன்னத நான் Serious ஆ எடுத்துக்கறேன். முதல்ல நீ எழுதின கதையை படிக்கனும். இப்ப மூணாவது ரவுண்ட் ஊத்து.

சாமி எனக்கொரு Idea இதை நாம Confirm பண்ணனும் னா அவங்க பேசறதை ஒட்டு கேட்கனும். அதுக்கு என் கிட்ட Plan இருக்கு. என் கிட்ட நல்ல சின்னதா ஒரு Button Microphone இருக்கு. அதை அந்த வீட்டில் ஹாலில் எங்காவது மறைச்சி வச்சிட்டா, இங்கே என் வீட்டில் Record mode ல போட்டு Record பண்ணிட்டா தெரிஞ்சிடப்போகுது. என்ன சொல்ற.

நல்ல Idea தான். ஆனா Risk இருக்காதுல.

ஒண்ணும் இருக்காது. நாளைக்கு அங்க போயி என்னோட பழைய Land line Phone Work பண்ணலை. அத எடுக்கிற சாக்குல Mic Fix பண்ணிடறேன். அது Magnetic Base So, Easy யா ஒட்டிக்கும். அங்க ஹால்ல Table கீழே சின்ன சின்ன Metal plates இருக்கும். அதுல இந்த Magnetic Mic யை Fix பண்ணிட்டா வேலை முடிஞ்சது. இங்கே நம்ம வீட்ல Receiver Set பண்ணி அவங்க 1 நாள் Activities Record பண்ணா போதும்.
ஆனா இதுல மட்டும் பிரசாத் யாழினியை சித்தி னு கூப்பிடலைல னு Confirm ஆயிட்டா, ஒரு பெரிய Tension விட்டது மாதிரி இருக்கும்.

சிவா நீ ஏண்டா அநாவசியமாக உன்னயே போட்டு குழப்பிக்கிற. அதெல்லாம் ஒண்ணும் இருக்காது. கவலைய விடு.
எல்லாம் நல்லபடியாவே நடக்கும். நீ மட்டும் நாளைக்கு அந்த Mic Voice Record பண்ற வேலையை பாரு. நான் நீ கொடுத்த கதையை நாளைக்கு முதல்ல படிக்கிற வேலையை பார்க்கிறேன்.
இப்ப நீ மூணாவது ரவுண்ட் ஊத்தற வேலையை பாரு.

நான் சிரித்து கொண்டே Rum யை ஊற்ற.. கொஞ்ச நேரத்தில் சாமியின் பாட்டு கச்சேரி ஆரம்பமானது.

தொடரும்...

உங்கள் கருத்துக்கள், suggestions
வரவேற்கப்படுகின்றன.
siva69.com@gmail.com